அத்திவரதர் நின்ற கோலம் - ஆடிப்பூரம் நாளில் தரிசன நேரத்தில் மாற்றம் - பக்தர்கள் கவனத்திற்கு
காஞ்சிபுரம்: ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதால் நாளை வி.வி.ஐ.பி பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை ஆடிப் பூரத்தை முன்னிட்டு மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவிலின் உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பிறகு இரவு 8 மணிமுதல் நள்ளிரவு வரை தரிசிக்கலாம்.
நாற்பது ஆண்டுகாலம் அனந்தசரஸ் தெப்பக்குளத்தில் ஆனந்த சயனத்தில் வீற்றிருந்த அத்திவரதர் ஜூலை 1ஆம் தேதி முதல் எழுந்தருளி பக்தர்களுக்கு
காட்சி அளித்துக்கொண்டிருக்கிறார். 48 நாட்களுக்கு மட்டுமே அத்திவரதர் தரிசனம் தருவார் என்பதால் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 30 நாட்களில் 50 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்திருப்பதாக கூறுகிறது புள்ளிவிபரம்.
காஞ்சிபுரம் வரை வந்து விட்டு அத்திவரதரை தரிசனம் செய்யாமல் போனவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ தெரியவில்லை. இதுநாள்வரை சயனகோலத்தில் காட்சி தரும் அத்திவரதர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் காட்சி தரப்போகிறார். குடியரசுத்தலைவர் முதல் பிரதமர், முதல்வர், ஆளுநர் முக்கிய பிரமுகர்கள் என லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

தரிசன நேரத்தில் மாற்றம்
நாளை முதல் வரும் வாரங்களில் அத்திவரதர் தரிசன நேரத்தில் சில மாற்றங்கள் இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியர் பொன்னையா நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ளார். இதனால் நாளை வி.வி.ஐ.பி பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். டோனர் பாஸ், வி.ஐ.பி பாஸ் வைத்துள்ளவர் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுபதிக்கப்படுவர்.

3 மணிவரை மட்டும் அனுமதி
நாளை புதன்கிழமை, மதியம் 12மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். அப்போது கோவிலின் உள்ளே அனுமதிப்பட்டவர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவர். மேலும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்கள் மதியம் 12 முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். இது நாளைக்கான அட்டவணை.

ஆடிப்பூரம் தரிசனம்
ஆகஸ்ட் 1 வியாழக்கிழமை வழக்கம் போல அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அன்றில் இருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதைன்பிறகு ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை ஆடிப் பூரத்தை முன்னிட்டு மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவிலில் கோவிலின் உள்ளே அனுமதிப்பட்டவர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவர்.

நள்ளிரவு வரை தரிசனம்
அன்றைய தினம் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பிறகு இரவு 8 மணிமுதல் நள்ளிரவு வரை தரிசிக்கலாம். அன்றைய தினம் விடுமுறை தினமான சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியூர் பக்தர்கள் கவனத்திற்கு
பின் 15ஆம் தேதி அன்று கருட சேவை உற்சவம் நடைபெறுவதால் மாலை 5 மணிக்கு மேல் அத்திவரதர் தரிசனம் இல்லை என பொன்னையா தெரிவித்தார். வெளியூர் பக்தர்கள் இந்த நேரத்துக்கு தகுந்தாற்போல தரிசனத்துக்குச் செல்வது நல்லது என்று ஆலய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications