ஸ்ரீ ஐயப்ப தர்ம பிரச்சார ரதம் - ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பக்தர்கள் தரிசனம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ஐயப்பதர்ம பிரச்சார ரதத்திற்கு சிறப்பு பூஜை நடை பெற்றது.
ராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவாட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு ஸ்ரீ ஐயப்ப தர்ம பிரச்சார ரத யாத்திரை இன்று 19.12.2019 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் வருகை புரிந்தது. ஸ்ரீ ஐயப்பனுக்கு பூர்ணகும்பத்துடன் வரவேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் ஸ்ரீ ஐயப்ப தர்ம பிரச்சார ரத யாத்திரை கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 10ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் இந்த ரத யாத்திரை கேரளாவிற்கு சென்றடைகிறது. சென்னையில் துவங்கிய ரத யாத்திரை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு இன்று 19.12.2019 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் வருகை புரிந்தது. ஸ்ரீ ஐயப்பனுக்கு பூர்ணகும்பத்துடன் வரவேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஐயப்பனுக்குரிய நீராஞ்சன தீபம் ஏற்றபட்டது. இதில் திருப்பத்துர் மாவட்ட நீதிபதி இந்திராணி, ரத ஒருங்கிணைப்பாளர் துரை சங்கர், வாலாஜாபேட்டை வட்டாச்சியர் பாலாஜி, வாலாஜாபேட்டை காவல்துறை ஆய்வாளர் எஸ் பாலு, சிப்காட் நவசபரி ஐயப்பன் கோவில் ஜெயச்சந்திரன், ஓம்சக்தி சுதாகர், கண்ணன் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும், ஓம்சக்தி பக்தர்களும், ஐயப்ப பக்தர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் ரத யாத்திரையை பக்தர்கள் அனைவரும் சரணகோஷமிட்டு வணங்கினர்.













Click it and Unblock the Notifications