For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடீஸ்வர யோகம் தரும் அஸ்வமேத பூஜை - ராஜாதி ராஜனாக வாழ ஆசையா

Google Oneindia Tamil News

இராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 01.02.2020 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் ரதசப்தமியை முன்னிட்டு அதிர்ஷ்ட தேவதையின் ஆசிர்வாதம் வேண்டியும், அரசர் வாழ்வு வேண்டியும் அஸ்வமேத பூஜை நடைபெறுகிறது.

சுக்கிர பகவானின் ஆசியுடன் யார் ஒருவர் அஸ்வமேத பூஜை செய்கிறார்களோ அவர் மிகப்பெரிய கோடீஸ்வரன் ஆவார் என்பது அஸ்வமேத பூஜையின் விதியாகும். பண வன கலையை கற்று விபரீத ராஜகுபேர யோகம் உண்டாகி அஷ்ட லட்சுமியின் அருள் கிடைக்க பெறும் பூஜையே அஸ்வமேத பூஜையாகும்.

Importance of Ashwamegh Yagam

ராஜபோக வாழ்வு வேண்டியும், ராஜகுமாரன் அமைய வேண்டியும், இந்திர பதவியுடன் இந்திரன் போல் வாழ வேண்டியும் நடைபெறும் அஸ்வ பூஜையில் கலந்து கொண்டு ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற அன்புடன் அழைக்கிறது ஆரோக்ய பீடம்.

அன்றைய காலத்தில் ராஜாதி ராஜாக்களும் மன்னாதி மன்னர்களும் மந்திரிகளும் வசீகர சக்தி பெறவும், மக்கள் வசியம் பெறவும், வெற்றிமேல் வெற்றி பெறவும், பெரும் செல்வம், செல்வாக்கு, புகழ் பெறவும், எதிரிகளை வெல்லவும் அஸ்வமேத யாகம், அஸ்வமேத பூஜை செய்து வந்தனர்.

தொழில் வியாபாரத்தில் ஏற்படும் மந்த நிலை மற்றும் தடைகள் விலகவும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும், அனைத்தும் குதிரை வேகத்தில் நன்மைகள் கிடைக்கவும், போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறவும், எதிர்பாராத வகையில் திடீர் அதிஷ்டம் உண்டாகவும், ஆண் சந்ததி ஏற்படவும், வம்ச விருத்தி கிடைக்கவும், சினிமா, அரசியல், பெரும் வியாபாரம், தொழில் செய்பவர்கள் மக்களின் செல்வாக்கை பெற்று நிரந்தர வெற்றியை பெறவும் இந்த யாகம் உதவும்.

Importance of Ashwamegh Yagam

வியாபார தொழில் ஜனாகர்ஷணம், தனாகர்ஷணம் ஏற்படவும், அரசியல்வாதிகள் நன்மையடையவும், நாடாளும் யோகம் பெற்று ராஜ வாழ்க்கை வாழவும், எந்த தொழில், வியாபாரத்தில் முதலிடம் பெறவும், எதிரிகளையும், சத்ருக்களையும் எதிர்கொள்ளும் வல்லமை பெறவும், சொப்ன தேவியின் அருள் கிடைத்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் பெற்று செல்வாக்குடன் வாழவும், மிக பெரிய கோடீஸ்வரர்களாக வேண்டியும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடவும், நல்ல மண வாழ்க்கை அமையவும் இந்த பூஜை நடைபெறுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த அஸ்வமேத பூஜையில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. இராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

English summary
Ashwamedha Yajna or horse sacrifice is one of the most popular observances in the Hindu society. Since this ritual is predominantly a procedure observed by the elites and princely classes, it is known as an elite ritual. There is a great deal of interesting information on Ashwamedha Yajna.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X