Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள்

மண்டூக முனிவருக்கு சவுந்தரராஜ பெருமாள் சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் பெருமாள் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார்.

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: மண்டூக முனிவருக்கு சவுந்தரராஜ பெருமாள் சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் பெருமாள் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார் சவுந்தரராஜ பெருமாள்.

 Mandooga maharisi Saba Vimosanam Thadikombu soundararaja perumal temple

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் பிரசித்திபெற்ற சவுந்தரராஜ பெருமாள் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று சவுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடைபெறவில்லை.

 Mandooga maharisi Saba Vimosanam Thadikombu soundararaja perumal temple

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் மூடப்பட்டது. இருப்பினும் கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் இன்றி வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன.

 Mandooga maharisi Saba Vimosanam Thadikombu soundararaja perumal temple

சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் பங்கேற்பு இன்றி மண்டூக முனிவருக்கு சவுந்தரராஜ பெருமாள் சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. வழக்கமாக பெருமாள் குடகனாற்றில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்குவார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, குடகனாற்றுக்கு பெருமாள் அழைத்து செல்லப்படவில்லை. மாறாக கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் பெருமாள் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார். இன்றைய தினம் மச்சம், மீனம், கூர்மம், வராஹம் உள்ளிட்ட தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளித்தார்.

 Mandooga maharisi Saba Vimosanam Thadikombu soundararaja perumal temple

பட்டி வீரன்பட்டி வரதராஜ பெருமாள்

இதேபோல் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக சித்ரா பவுர்ணமி விழா பெரிய அளவில் நடைபெறவில்லை. மூலவர் வரதராஜ பெருமாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கோவில் முன்புற கதவுகள் மூடப்பட்டு, பக்தர்கள் இன்றி கோவில் அர்ச்சர்கள் மட்டும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்தனர்.

 Mandooga maharisi Saba Vimosanam Thadikombu soundararaja perumal temple
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+