மன்மத ஆண்டு: கும்பம் ராசிக்காரர்களே சக்கரத்தாழ்வாரை வணங்குங்கள்!

Subscribe to Oneindia Tamil

இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீமன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் கும்பம் ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் சில பொதுவான பலன்களைப் பார்ப்போம்.

நவகோள்களில் தன் பணியை நீதி வழுவாது செய்யும் அனலோன் மகனான அந்தகனே கும்பம் ராசியின் அதிபராவார். தெய்வீக குணமிக்க கோடியில் ஒருவர் கும்பத்தில் உதிக்கும் ஞானி ஆவார் என்னும் சொல்லுக்கு உரித்தான கும்பம் ராசி அன்பர்களே.

Manmadha year Kumbam Rasi horoscope parikaram

மதிப்பு மரியாதை கவுரவமும் உடன் பிறந்தவை இதனை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் இந்த ஆண்டு பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் நிலையில்தான் பிறக்கிறது. இருந்தாலும் ஆண்டின் மத்தியில் குருபகவான் சாதகமான இடத்துக்கு வருகிறார்.

சனியால் பின்னடைவு

சனி உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. தொழிலில் சிறு சிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு போல் இல்லாமல் போகலாம். உடல் உபாதைகள் லேசாக உங்களை நோகச் செய்யலாம்.

குருவின் நிலை

குருபகவான் ஆறாம் இடத்தில் இருக்கிறார் இது சாதகமான நிலை இல்லை. பொதுவாக குருபகவான் ஆறாம் இடத்தில் இருந்தால் உடல் நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார் மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். ஆனாலும் கவலை வேண்டாம். குரு பகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது ஒன்பதாம் இடத்துப் பார்வையால் உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும். இதனால் எந்த இடையறையும் நீங்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள் உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டு இருக்கும் அதனை கண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும்.

ராகுவினால் தடை

நிழல் கிரகமான ராகு தற்போது எட்டாம் இடமான கன்னியில் இருக்கிறார். எனவே முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார் உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம் இன்னொரு நிழல் கிரகமான கேது இரண்டாம் இடத்தில் இருக்கிறார். எனவே பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு பகைவர் வகையில் தொல்லை வரும்.

பொருளாதார வளம் கூடும்

வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். ஜூலை மாதத்திற்கு பிறகு குருவால் பொருளதார வளம் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். ஆனி மாதம் 29ம் நாள் 14-07-2015ல் குருபகவான் சிம்மத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அதோடு அவரின் ஐந்தாம் இடத்துப்பார்வையும் சிறப்பாக உள்ளது. உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். மதிப்பு மரியாதை சிறப்படையும் பொருளாதார வளம் அதிகரிக்கும் எந்த செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் செயலாற்றும் ஆற்றல் மேம்படும்.

சக்கரத்தாழ்வாருக்கு அர்ச்சனை

சனிக்கிழமை தோறும் சனி ஹோரையில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நதியில் நெய் தீபம் ஏற்றி மலர் மாலை சூட்டி அர்ச்சித்து துதித்து வழிபட அனைத்து இன்னல்களும் நீங்கி நன்மை உண்டாகும். தினசரி ஸ்ரீஅனுமனை வழிபட்டு அனுமன் துதிகளை பாராயணம் இவ்வாண்டு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+