கோடீஸ்வர யோகம் தரும் கோ பூஜை - மாட்டுப்பொங்கல் நாளில் கோ பூஜை செய்ய நல்ல நேரம்
சார்வரி வருடம் ஜனவரி 15ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமையில் மாட்டு பொங்கல் வருகிறது. அன்றைய நாள் சுக்கிர ஓரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை கோ பூஜையை செய்யலாம்.
சென்னை: சார்வரி வருடம் ஜனவரி 15ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமையில் மாட்டு பொங்கல் வருகிறது. அன்றைய நாள் சுக்கிர ஓரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை கோ பூஜையை செய்யலாம். பசுமாடு இல்லாதவர்கள் வீட்டில் கோ சிலைக்கு பூஜை செய்தால் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். மாட்டுப் பொங்கல் முதல் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள் நிச்சயம் நல்ல பலன்கள் படிப்படியாக கிடைப்பதையும் நீங்களே உணர்வீர்கள்.
நம்முடைய வீட்டிலோ, ஆலயங்களுக்குச் சென்றோ கோ பூஜை என்று சொல்லக்கூடிய, பசுவிற்கான பூஜையைச் செய்தால் சகல சவுபாக்கியங்களும் உருவாகும். பசுவின் உடம்பில் அனைத்து விதமான தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும், நவக்கிரகங்களும் குடியிருப்பதால், கோபூஜை செய்யும் பொழுது அனைவருடைய பரிபூரணமான அருளும் நமக்கும் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன.

மகாலக்ஷ்மியின் ஸ்வரூபம் கோமாதாவின் பின்புறத்தில் இருக்கிறது. அதனால் தான் பசுவின் பின்புறத்தை தொட்டு பக்தர்கள் வணங்குகிறார்கள். கோமாதாவின் எல்லா இடங்களிலும் எல்லா தெய்வங்களும் நிறைந்து காணப்படுகிறார்கள். நீங்கள் எந்த இடத்தை தொட்டு வணங்கினாலும், உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் கோமாதா வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். பசுவிற்கு அகத்திக்கீரை தானம் கொடுத்து பித்ரு தோஷ நிவர்த்தி செய்வது போல, சகல பாக்கியங்களும் கிடைக்க, பசுவை சேயாய் பாவித்து, நீங்கள் அருகம்புல் கட்டு கொடுத்து வரலாம். பசு மாடுக்கு நாங்கள் எங்கே செல்வது? என்று கேட்கவே வேண்டாம். அனைத்து கோவில்களிலும் வெள்ளிக் கிழமையில் கோபூஜை நடக்கும். கோவில்களில் இருக்கும் பசுக்களுக்கு அருகம்புல் தானம் செய்யுங்கள்.

நம்முடைய வீட்டில் வெள்ளி அல்லது தங்கத்தால் செய்த கோமாதா சிலைக்கு மஞ்சள் தண்ணீரால் அபிஷேகம் செய்து, சந்தன, குங்கும பொட்டு வைத்து மலரால் அலங்காரம் செய்யுங்கள். இப்படி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் சுக்கிர ஓரையில் இதை செய்வதால் எல்லா நன்மைகளும் வாழ்க்கையில் கிடைக்கும். வெள்ளி வாங்கும் அளவிற்கு எங்களிடம் காசு இல்லை என்று கூறுபவர்களுக்கு வெள்ளிக்கூட வேண்டாம், மண்ணால் செய்யப்பட்ட பசுவின் சிலைக்கு வழிபாடு செய்தால் கூட, உயிருள்ள பசுமாட்டிற்கு செய்யும் பலன்கள் கிடைக்கும்.
மனிதன் தாய்ப்பால் குடித்து வளர்ந்ததை விட, பசும்பால் குடித்து வளர்வது தான் அதிகம். எனவே தான் தாய்க்கு இணையாக கருத வேண்டிய கோமாதாவை வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். மாட்டுப் பொங்கல் முதல் தொடர்ந்து கோமாதாவை வாருங்கள் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications