For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சனிப்பெயர்ச்சி 2020: திருநள்ளாறு நளன் தீர்த்த குளத்தில் நீராட தடை - தரிசனம் மட்டுமே

திருநள்ளாறு நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். சனிபகவானை தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் வரும் 27ஆம் தேதியன்று சனிப்பெயர்ச்சி விமரிசையாக நடைப்பெற உள்ளது. பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு வரும் 19ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கோயிலில் வழிபடவும், பூஜைகள், அபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொள்ள அர்ச்சனை செய்ய அனுமதியில்லை என்று அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

Sani peyarchi 2020: Collector Ban bathing in Thirunallar Nalan Theertha Kulam

திருநள்ளாறு சனிபகவான் நவகிரக தலங்களில் மிக முக்கியமான தலமாகும். சனீஸ்வர பகவன் தனி சன்னதியில் பொங்குசனியாக அருள்பாலிக்கிறார். தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை பக்தர்களை துன்பங்களிலிருந்து விடுவிக்கிறார்.

சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டலை ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவார். வாக்கிய பஞ்சாங்கப்படி சர்வாரி தமிழ் ஆண்டு வரும் மார்கழி 12, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.22 மணிக்கு தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு இடப்பெயர்சி அடைகிறார்.

சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறுவில் உள்ள ஸ்ரீ தர்ப்பனேஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த சனி பெயர்ச்சி திருவிழாவின் போது, ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பூஜை மற்றும் வழிபாடு செலுத்த விரும்பும் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தரவோ அல்லது தேவஸ்தானத்தின் இ-சேவா சேவைகளைப் பெறவோ அழைக்கப்படுகிறார்கள். இ-சேவைகளுக்கான பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்ய முடியும்.

English summary
Thirunallar Saneeswaran Temple is scheduled to be held on the 27th. The Karaikal District Collector has issued an order prohibiting devotees from bathing in the Nalan pool due to the large number of devotees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X