Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமண தடை நீக்கும் சுயம்வரகலா பார்வதி யாகம்

திருமண தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகமும் கந்தர்வ ராஜ ஹோமமும், குழந்தை பாக்கியம் தரும் சந்தானகோபால யாகமும் நடைபெற உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் அமைய வேண்டியும் தை பூச திருநாள், பவுர்ணமியை முன்னிட்டு சுயம்வரகலா பார்வதி யாகமும் கந்தர்வ ராஜ ஹோமமும், குழந்தை பாக்கியம் தரும் சந்தானகோபால யாகமும் பவுர்ணமி நாளில் நடைபெற உள்ளது.

பல குடும்பத்தினரும் தங்கள் வீட்டுப் பையனுக்கு மணமகள் தேடித் தேடிச் சலித்துப் போய் விடுகிறார்கள். ஒன்று இருந்தால், இன்னொன்று அமைய மாட்டேன் என்கிறது. அதைபோன்று குழந்தை பாக்யம் இல்லாமையும் ஆகும்.

ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்களால் திருமணம் தடை ஏற்படும்.

ருது தோஷம் என்பது ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைத்து ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் திருமணம் செய்ய தாமதம் ஆகும்.

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம்

பொதுவாக ஒருவருக்கு திருமணம் தாமதமானால், திருமண தாமதத்திற்கு முதல் காரணமாக ராகு கேது தோஷம் என்பதாக இருக்கிறது, இரண்டாவது காரணம் செவ்வாய் தோஷம் என்பதாகவும், மூன்றாவதாக களத்திர தோஷம் என்பதாகவும், நான்காவதாக குரு பலன் இல்லை என்பதாகவும் ஜோதிடர்களால் கூறப்படுகிறது. ஜாதகருக்கு திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு

யாகங்கள் செய்யலாம்

யாகங்கள் செய்யலாம்

அவர்களின் ஜாதகம் எந்த திசையில் நடைபெறுகிறது என்பதை அறிந்து பரிகாரம் செய்ய வேண்டும். தோஷ பரிகாரங்களில் மிகவும் சிறந்தவைகளாக விளங்குபவை ஹோமங்கள் ஆகும். புராண காலத்தில் தெய்வங்களும், சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், அரசர்களும் தாங்கள் விரும்பிய காரியங்கள் வெற்றி அடைய ஹோமங்கள் செய்து தமது இஷ்ட காரியங்கள் மற்றும் வரங்களையும் பெற்றுள்ளனர்.

திருமண தடை நீக்கும் யாகங்கள்

திருமண தடை நீக்கும் யாகங்கள்

சுயம்வர கலா பார்வதி ஹோமம் நடத்தினால் பெண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் நடத்தினால் ஆண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

குழந்தை பேறு தரும் ஹோமம்

குழந்தை பேறு தரும் ஹோமம்

வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருமணம் ஆக வேண்டிய நிலையில் உள்ள ஆண் ,பெண் ஆகியோரை அழைத்து வந்து இங்கு ஹோமம் செய்து பலன் பெறுகிறார்கள் பல பெற்றோர்கள். பலரது வாழ்க்கையிலும் கெட்டிமேள ஓசை ஒலிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி இங்கே சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன. நாளைய தினம் பவுர்ணமியை முன்னிட்டு சுயம்வரகலா பார்வதி யாகமும் கந்தர்வ ராஜ ஹோமமும், சந்தானகோபால யாகமும் நடைபெற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+