சிறுநீரக கோளாறில் அரசியல் தலைவர்கள் மரணம் - சுஷ்மா, ஜெட்லியின் முடிவை முன்பே கணித்த பஞ்சாங்கம்
பல மாதங்களுக்கு பின்பு நடக்கப் போவதை முன்பே கணித்து சொல்வதுதான் பஞ்சாங்கத்தின் சிறப்பு. மழை, வெள்ளம், வறட்சி, தங்கம் விலை உயர்வு பங்குச்சந்தை உயர்வு, வீழ்ச்சி என அனைத்தையும் கணித்துள்ள விகாரி வருடத்த
சென்னை: விகாரி வருடம் என்னென்ன முக்கிய விசயங்கள் நடைபெறும் என்று சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடர்புடையவர்களுக்கு விபத்து, சிறுநீராக கோளாறுகள் ஏற்பட்டு உயிர் பிரிய நேரும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.
தமிழ் பஞ்சாங்கங்கள் பின்னால் நடக்கும் நன்மை தீமைகளை கிரகங்களின் நகர்வு, நட்சத்திரங்களின் சஞ்சாரத்தை வைத்து கணித்துள்ளனர். மழை வெள்ளம் எதனால் வரும், வறட்சியா? தீ விபத்தா என கிரகங்களின் கூட்டணியை வைத்து கணிக்கின்றனர்.

இந்த ஆண்டு விகாரி வருஷத்திய ஆற்காடு சுத்த சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கிரகங்களின் நகர்வை வைத்து சில முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் எப்படி இருக்கும் என்றும், வானிலை மாற்றங்கள் பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும் பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர். அதேபோல அரசியல் கட்சி தொடர்புடைய சிலருக்கு வாகன விபத்து, சிறுநீராக கோளாறுகள் ஏற்பட்டு உயிர் பிரியும் என்றும் கணித்துள்ளனர்.
அதே போல ராஜகிரகமாகிய சூரியன் இவ்வாண்டு மந்திரியாகவும் இருப்பதால் அரசியலில் முக்கியமான பதவியில் உள்ளவர்களுக்கு கெண்டாதி கெண்டாம் ஏற்படும். எங்கும் மதக்கலவரம் நடக்கும் மடாதிபதிகளுக்கு பல புதிய விதிமுறைகளை மத்திய அரசாங்கம் விதிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications