7 விஷயம் நடக்கும்! ஒவ்வொன்றும் உச்சத்தில் தூக்கி உட்கார வைக்கும்! குரு வக்ர பெயர்ச்சி மிதுன ராசி பலன்
சென்னை: அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். குரு பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக மிதுன ராசிக்கு 7 விஷயங்கள் நடக்க போகின்றன. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். மிதுன ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
1. நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடங்களில் இருந்து எல்லாம் பணம் வரும். சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கூட பணம் உங்களை தேடி வரும்.

2. ஆரோக்கியத்தில் கவனம் - உறவில் கவனம்: ஆனால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சமயங்களில்கே கிட்னி பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் வயிற்று பிரச்சனைகள் கூட அதிகம் ஏற்படலாம்.
3. இந்த வருடமே வீடு காட்டுவீர்கள். மே மாதமே நிலம் வாங்கும் வாய்ப்பு இருக்கும். தொட்டது துலங்கும். இதுவரை இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகி நல்லதே நடக்க தொடங்கும். வாழ்க்கை உங்களுக்கு இனி ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம் அடையும். முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை தொடப்போகும் காலம் வரும்.
4. தோல்விகளை மறைக்க வெளியே கோபமாக செயல்படுவது.. உங்களிடம் யாரும் துணிந்து பேச முடியாத அளவிற்கு முரட்டு தனமாக இருப்பது என்று இத்தனை காலம் வாழ்க்கையை கழித்து வந்தீர்கள் இனி அந்த நிலை இருக்காது. . ஏற்கனவே திருமணம் ஆனவர்ளுக்கு கணவன் மனைவி தனி தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சிலருக்கு டைவர்ஸ் செய்ய வேண்டிய மோசமான சூழல் கூட ஏற்பட்டது.
5. நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.
6. குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். முக்கியமாக இளைஞர்கள் காதல் வயப்படுவதில் கொஞ்சம் கவனமாக யோசித்து செயல்படவும்.
7.இத்தனை காலம் பணம் இல்லை, வேலை இல்லை, பார்க்கிற வேளையில் போதிய வருமானம் இல்லை என்று புலம்பிக்கொண்டு இருந்து இருப்பீர்கள். இனி அப்படி புலம்ப வேண்டாம். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் வாழ்க்கை மாற போகிறது.
8. குடும்பத்தில் அம்மா, அப்பா உடன் கூட சண்டை போடும் அளவிற்கு கடினமான சூழல் இருந்தது. அதேபோல் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் கல்வியில் ஏகப்பட்ட சிரமங்கள் நடந்துள்ளன.












Click it and Unblock the Notifications