பங்குனி பவுர்ணமியில் தெப்ப உற்வசவம் - திருப்பதியில் 5 நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து
திருப்பதியில் தெப்பத்திருவிழாவை ஒட்டி 5 நாட்களுக்கு அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி: பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருமலை திருப்பதியில் நடத்தப்படும் வருடாந்திர தெப்ப உற்சவத் திருவிழாவை முன்னிட்டு, சகஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதே சமயம், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று அபாயம் படிப்படியாக குறைந்து விட்ட காரணத்தால், கொரோனா கட்டுப்பாடுகளும் பெருமளவு தளர்த்தப்பட்டு அனைத்து பகுதிளும் சகஜ நிலைக்கு மாறிக்கொண்டிருக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களிலும் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போல் திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தெப்ப உற்சவம்
தெப்ப உற்சவ விழாவின் முதல் நாளான மார்ச் 13ஆம் தேதியன்று சீதா, லட்சுமண, ஸ்ரீஆஞ்சநேயர் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ஊர்வலமும், 14ஆம் தேதியன்று ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் மூன்று சுற்று ஊர்வலமும் நடைபெறும். 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஏழுமலையான் ஸ்ரீவாரி புஷ்கரணியில் வலம் வரவுள்ளார். நிறைவு நாளன்று ஏழு சுற்றுக்கள் புஷ்கரணியில் சுவாமிகள் வலம் வருகின்றனர்.

பங்குனி மாத பவுர்ணமி
பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறும் ஐந்து நாட்களுக்கு, சகஸ்ர தீப அலங்காரம் மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆர்ஜித சேவைகள் தொடக்கம்
அதே சமயம், கொரோனா நோய்த் தொற்று அபாயம் படிப்படியாக குறைந்து விட்ட காரணத்தால், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை, மேல்சாட் வஸ்திரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட உள்ளன.

ஏப்ரல் 1 முதல் அனுமதி
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்காரம் உள்ளிட்ட சேவைகளை நேரடியாகவும், இணையதளம் மூலமும் பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், ஆர்ஜித சேவைகள், உதயாஸ்தமன சேவை, விம்சதி வர்ஷ தர்ஷிணி சேவை டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கொரோனா நிபந்தனைகளுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு பிரசாதம் வழங்குவதிலும் பழைய முறையே பின்பற்றப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications