திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் பங்குனித்திருவிழா - பக்தர்கள் தரிசனம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் இங்கு நடக்கும் தெப்பத்திருவிழா விஷேசமானது.
திருச்சி: மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் பங்குனி மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை மாலை இரண்டு நேரங்களிலும் தாயுமானவர் சுவாமியும் அம்பாள் மட்டுவார்குழலம்மை முக்கிய வீதிகள் உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 27ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு பிரம்ம தீர்த்தம் தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 27ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு பிரம்ம தீர்த்தம் தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் தாயுமானசுவாமி மீது மாலை நேரத்தில் சூரிய ஒளி பட்டு பொன் வண்ணமாக பக்தர்களுக்குக் காட்சி அளிப்பதை பார்க்கலாம். இது சூரிய பூஜை ஆகும்.

தாயுமான சுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற சோம ரோகிணி தெப்பக்குளம் கி.பி. 1-ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் வெட்டப்பட்டது. இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினந்தோறுட் இரவு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடும் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 27ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு மலைக்கோட்டைக்கு மேற்கில் உள்ள பிரம்ம தீர்த்தம் என்ற தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோயில் உதவி ஆணையர் விஜயராணி, கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications