Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் பங்குனித்திருவிழா - பக்தர்கள் தரிசனம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் இங்கு நடக்கும் தெப்பத்திருவிழா விஷேசமானது.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் பங்குனி மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை மாலை இரண்டு நேரங்களிலும் தாயுமானவர் சுவாமியும் அம்பாள் மட்டுவார்குழலம்மை முக்கிய வீதிகள் உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 27ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு பிரம்ம தீர்த்தம் தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது.

Trichy Malaikottai Tayumanava Swami Temple Panguni Festival

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 27ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு பிரம்ம தீர்த்தம் தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது.

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.

Trichy Malaikottai Tayumanava Swami Temple Panguni Festival

இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் தாயுமானசுவாமி மீது மாலை நேரத்தில் சூரிய ஒளி பட்டு பொன் வண்ணமாக பக்தர்களுக்குக் காட்சி அளிப்பதை பார்க்கலாம். இது சூரிய பூஜை ஆகும்.

Trichy Malaikottai Tayumanava Swami Temple Panguni Festival

தாயுமான சுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற சோம ரோகிணி தெப்பக்குளம் கி.பி. 1-ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் வெட்டப்பட்டது. இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினந்தோறுட் இரவு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடும் நடைபெறும்.

Trichy Malaikottai Tayumanava Swami Temple Panguni Festival

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 27ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு மலைக்கோட்டைக்கு மேற்கில் உள்ள பிரம்ம தீர்த்தம் என்ற தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோயில் உதவி ஆணையர் விஜயராணி, கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+