Rasi Palan: மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 15 நாட்களில் நடக்கப்போகும் மாற்றம்.. அதிர்ஷ்டம் உண்டா?
Rasi Palan: டிசம்பர் 16 முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்திற்கான மேஷம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு உறவுகளிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இணக்கமாகச் செல்வது நல்லது. பெற்றோர், பெரியவர்கள், ரத்த பந்த உறவுகளுடன் சிறு சிறு பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பிரச்சனைகளில் இருந்து விலகியிருப்பது நல்லது. தொழில் ரீதியாக அனுகூலமும், லாபமும், சந்தோஷமும் ஏற்படும்
மன அழுத்தங்கள் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உள்ளூர், வெளியூர், தொலைதூர பயணங்களுக்கான யோகம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த வந்த பாதிப்புகள் நீங்க அபிராமி அந்தாதியில் உள்ள பாடல்களைக் கேட்பது நல்லது. பிள்ளைகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
உங்கள் மீது தவறே இல்லையெனிலும் பிள்ளைகள் ஏதாவது குறை சொன்னாலும் அதனை கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. தெய்வீக வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு, மாகன்கள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சளி, தொண்டை பாதிப்புகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வியாழக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
ரிஷபம்
சிவன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும். கழுத்து, நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. சட்டவிரோதமான செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுடன் பழகுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், பயணங்களில் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் ஆவேசப்பட்டு பேசுவதை தவிர்ப்பது நல்லது. கூட இருப்பவர்கள் செய்யும் பிரச்சனைகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். யோக பலத்தை அதிகமாகப் பெறுவீர்கள். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழிலுக்கு உண்டான அமைப்பு மிகப்பெரிய ஏற்றத்தையும், நம்பிக்கையையும ஏற்படுத்தும்.
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றியைத் தரும். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது, வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications