Sani Peyarchi: சனிப்பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசியினர் யார் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இதுவரை 10 ஆம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் 11 ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். எல்லா விதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். ரிஷப ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். பெற்றோர், பெரியோர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

யோகம்
உறவினர்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது, அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. முதுகு தண்டுவடம், கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கோயில் திருப்பணிகளைச் செய்வது, கோவில் கட்டுவது போன்ற யோகங்கள் உண்டு. வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் உண்டாகும்.
புதிய பதவி
புதிய கெளரவங்கள், புதிய பதவிகள் கிடைக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரும் யோகம் உண்டாகும். பெற்றோர், பெரியோரின் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள், கனவுகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் நல்ல ஏற்றம், மாற்றம் உண்டாகும். தொழிலில் உயர்ந்த பதவி கிடைக்கும்.
மாற்றம் முன்னேற்றம்
இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், சொந்த தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் அதிக ஏற்றத்தைப் பெறும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் அற்புதமான ஏற்றம் உண்டாகும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம்.
பரிகாரம்
திருப்பதி திருமலையில் ஓர் இரவு தங்குவது, கீழ் திருப்பதியில் அலமேலு தாயாரைச் சென்று வழிபாடு செய்வது, கோவிந்தராஜ பெருமாளை வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், மகலாட்சுமி கடாட்சத்தையும் தருவது ஏற்றத்தைக் கொடுக்கும். மாதம்தோறும் ஒரு வெள்ளிக்கிழமையில் சிவன், பார்வதி கோயிலுக்கு அருகம்புல், வில்வம், வெள்ளைத் தாமரை கொடுப்பது உங்களுக்கு அற்புதமான மேன்மையைத் தரும்.
துலாம் [Thulam Sani peyarchi palan]
துலாம் ராசியினருக்கு இதுவரை 5 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 6 ஆம் இடத்திற்குப் பெயர்ச்சியாகிறார். 6 ஆம் இடம் என்பது சத்ரு ஜெயம், ரோக ஜெயம். நிறைய அனுகூலங்கள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். இழுபறியாக இருந்த விஷயங்கள் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மாற்றம், முன்னேற்றம்
இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் என அனைத்து விதமான முன்னேற்றங்களும் ஏற்படும். பூர்வீகத்தில் வீட்டை இடித்து கட்டுவீர்கள். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் தீரும். தைரியம் ஏறபடும். துணை விஷயத்தில் மனம் விட்டுப் பேசிக் கொள்வது நன்மை பயக்கும்.
தடைகள் நீங்கும்
குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மையைத் தரும். பிள்ளைகளின் படிப்புத் தடை, உத்தியோகத் தடை என பல்வேறு தடைகள் இருந்தாலும் அவை எல்லாம் படிப்படியாக மாறும். 5 ஆம் இடத்தில் ராகு இருப்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். டிசம்பர் மாதம் வரை அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 ஆவது பாடல்களை படிப்பது அற்புதமான அமைப்பைத் தரும்.
ஆரோக்கியம்
அடிவயிறு, கழிவுப்பாதை, முதுகு தண்டுவடம், தோல் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அடிமை தொழிலில் இருந்த தனிப்பட்ட தொழிலைத் தொடங்கும் யோகம் உண்டாகும். நிறைய ரிஸ்குகளை எடுக்கும் காலகட்டம். நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்த தொழில்களை தொடங்கி செய்து முடிப்பீர்கள். பெரிய வெற்றிகளைப் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம்.
சனி உச்சம்
6 ஆம் இடத்தில் வருவதால் அனைத்து விஷயங்களிலும் ஜெயம் ஏற்படும். புதுமையான அமைப்புகள் ஏற்படும். சோம்பல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. துலாமில் சனி உச்சம் பெறுவதால் தினந்தோறும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். பெரிய தலைமைப் பண்புக்கு வரும் யோகம் உண்டாகும். வழக்கறிஞர்கள், காவல் துறையினர், அரசியல், நீதித்துறை போன்ற சீருடைப் பணியாளர்களுக்கு பெரும் கெளரவம், ஜனாதிபதி விருது போன்றவை கிடைக்கும் யோகம் உண்டாகும்.
பரிகாரம்
தஞ்சாவூரில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் 38 எலுமிச்சம்பழத்தைக் கொடுத்து 5 பழத்தை வீட்டிற்கு வாங்கிக் கொண்டு வர வேண்டும். பட்டீஸ்வரர் துர்க்கை படத்திற்கு அகல்தீபம் ஏற்றி வழிபாடு செய்வது விசேஷமான பலன்களைத் தரும். மாதத்திற்கு ஒரு செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் புற்று உள்ள அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது மேன்மையைத் தரும்.
மகரம் [Magaram Sani peyarchi palan]
மகர ராசியினருக்கு ஏழரை சனியில் இருந்து பரிபூரண நிவர்த்தி அடைந்துள்ளீர்கள். 2 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 3 ஆம் இடத்துக்குச் சென்றுள்ளார். உங்கள் ராசிநாதனே சனி பகவான் தான். அற்புதமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக் குமுறல்கள், ஏழரை வருடமாக இருந்து வந்த வருத்தம், மனக் கசப்பு நீங்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
வண்டி வாகனத்தில் மிகுந்த கவனம் தேவை. வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் குடும்பத்தில் அந்நியர் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
தொழில்
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து வித நல்ல மாற்றங்களும் உண்டாகும். தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். தாய் தந்தையரை சந்திக்காமல் இருந்தவர்கள் மீண்டும் சந்திக்கும் யோகம் உண்டாகும். தாய், தந்தைக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த கஷ்டத்திற்கு நல்ல மருத்துவர்கள், மருந்துகள் கிடைக்கும் யோகம் உண்டாகும்.
மனபாரம் தீரும்
நல்ல வழிகாட்டி, நல்ல குரு கிடைப்பார்கள். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவுமுறையில் இருக்கும் மனத் தாங்கல்கள் தீரும். உங்கள் மீது அக்கறை கொண்டிருந்தவர்களுக்கும் உங்களுக்கும் இருந்து வந்த மன தாங்கல்கள் எல்லாம் தீரும். அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களை வருத்தப்படச் செய்தவர்கள் எல்லாம் உங்களை விட்டு விலகிச் செல்லும் யோகம் உண்டாகும்.
முன்னேற்றம்
காரியசித்தி மாலை தினமும் சொல்வது, கோளார் பதிகத்தை தினமும் கேட்பது விசேஷமான பலன்களை ஏற்படுத்தித் தரும். அற்புதமும், லாபமும் ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும். அதிக பலத்தையும், சந்தோஷத்தையும் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கும். லாபங்கள் கிடைக்கும் காலகட்டம்.
பிரச்சனைகள் தீரும்
கணவரால், அப்பா, அம்மாவால், நண்பர்களால் தொந்தரவு, வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், நம்பிக்கை மோசடிகள், உங்கள் மீது அன்பு கொண்டிருந்தவர்களால் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். அவர்கள் சொன்ன அவச் சொல்கள் எல்லாம் மாறிவிடும். பிள்ளையார்பட்டிக்கு சென்று வருவது, அபிஷேகம் செய்வது ஏற்றத்தைத் தரும்.
தடைகள் நீங்கும்
மாதத்தில் ஒரு சனிக்கிழமை விநாயகரையும், அனுமனையும் வழிபாடு செய்வது சகலவிதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தும். வாரத்தில் ஒருநாள் நீங்கள் பிறந்த கிழமையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு போடும் நபர்களுக்கு தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் நல்ல காலகட்டம். பெரிய பதவி, உயர்வு, கெளரவத்தைப் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications