விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி எப்போது முடியும்?.. சனி அள்ளிக் கொடுப்பாரா.. கெடுப்பாரா?
சனிப்பெயர்ச்சி: மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி எப்போது முடியப் போகிறது. இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், ஏற்றங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.

2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடியப் போகிறது. உங்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்ட பலன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் அர்த்தாஷ்டம சனி தொடங்கியது. இன்று வரை அர்த்தாஷ்டமசனி தொடங்கி பல்வேறு துன்பங்களையும், சவால்களையும் சனி பகவான் கொடுத்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்தில் பிரச்சனை, வேலை இழப்பு, நிம்மதியின்மை, தொழிலில் நஷ்டம், காதல் தோல்வி என பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வந்திருப்பீர்கள். ஒரு சிலர் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறீர்கள்.
இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் அர்த்தாஷ்டம சனி முழுமையாக முடியும்போது உங்களை விட்டு விலகப் போகிறது. இந்த அர்த்தாஷ்டம சனி வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சியின் போது முழுவதுமாக முடியப் போகிறது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். அதாவது உங்கள் ராசிக்கு 4 ஆம் வீட்டில் இருந்து 5 ஆம் வீட்டுக்குப் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி முழுவதுமாக நிறைவடைகிறது.
சனி ஐந்தாம் வீட்டுக்கு வருவதால் மிகவும் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். உங்களுக்கு இந்த ஆண்டு முதல் பஞ்சமசனி தொடங்குவதால் அடுத்த இரண்டரை வருடம் 91 சதவீதம் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக தொழில், வேலையில் இதுவரை இருந்து வந்த அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து நல்ல நிலைக்கு செல்வீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
தனிப்பட்ட வகையில் கொடுத்த வாக்கை குடும்பத்தில், வெளியில் காப்பாற்றுவீர்கள். உன்னத ஸ்தானத்தை பெறப் போகிறார்கள். பிள்ளைகளுடன் கோபம், பிள்ளைகளின் வண்டி, வாகனம், பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். அபிராமி அந்தாதியைப் படிப்பது பிள்ளைகள் வழி வரும் பிரச்சனைகளைத் தடுக்கும்.
சுப விரையம் உண்டாகும். எல்லாவற்றிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தனம், குடும்பம், வாக்கு பெருகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தாய் வழி, தந்தை வழி உறவு மேம்படும். ரத்த பந்த உறவுகளுக்குள் இருந்து வந்த அனைத்து விதமான பிரச்சனைகள் தீரும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்க்காத அனுகூலம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உண்டாகும். இந்த சனிப்பெயர்ச்சி முயற்சியையும், முன்னேற்றத்தையும் தரும் காலமாக இருக்கும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications