"இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமு" - சொல்லி அடிக்கும் கடகம் ராசிக்கு அள்ளித் தரும் 4 கிரகங்கள்
சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்களின் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீன ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது கடக ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீச்சமாக உள்ளார். இது நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை சதுர் கிரக யோகம் என்பார்கள்.
கடக ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் கூட்டு சேர்க்கை நடைபெறவுள்ளது. தான் மட்டுமல்லாமல் தன்னை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்பவர் நீங்கள். எந்த காரியத்திலும் துணிச்சலுடன் இறங்குவீர்கள். ஆனால் அண்மை காலமாக நீங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் ஏராளம்.
உதவி மனப்பான்மை உள்ளம் கொண்ட நீங்கள் தற்போது பிறரின் உதவியை நோக்கி காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். கடன் சுமை அதிகரித்திருக்கும். எதிரிகள் அதிகரித்திருப்பார்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன் வலம் வந்தவர்கள் சொல்ல முடியாத சங்கடங்களை அனுபவித்திருப்பீர்கள். தற்போது நான்கு கிரகங்கள் பாக்கிய ஸ்தானத்தில் சேர்க்கை நடத்துவது பலன்களை அள்ளித்தர போகிறது.
தொழில் ரீதியாக உள்ள அனைத்து தடைகளும் நீங்கும். உங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலங்களில் இழந்த செல்வம், செல்வாக்கு எல்லாவற்றையும் சேர்த்து சம்பாதிப்பீர்கள்.
வெளிநாடு செல்வதற்காக முயற்சி செய்வோருக்கு அதற்குண்டான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு பயணங்களால் நல்ல ஆதாயம் உண்டு. நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் திருமண தடை இருப்போருக்கு அதற்கான தடைகள் நீங்கும். இந்த காலத்தில் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. விவாகரத்து பெற்றவர்களுக்கு மறுமணம் நடைபெற வாய்ப்புள்ளது.
அதேபோல திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்போது குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்விக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் நீங்கும். சொத்துகளில் இருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய வண்டி, வாகனம், ஆபரணங்கள் வாங்குவதற்கான யோகம் உள்ளது. கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
குழந்தைகளை வெளிநாடு, வெளிமாநிலங்களில் உயர்கல்வியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் குழந்தைக்கு திருமணம் ஆவதற்கான வாய்ப்பும் உள்ளது. கணவன் - மனைவி உறவில் மட்டும் அவ்வப்போது மன கசப்புகள் வந்து நீங்கும். உங்களின் உடல் ஆரோக்கியத்திலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications