Rasi Palan This Week: சிம்ம ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. எந்த விஷயத்தில் கவனம் தேவை?
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சிறு சிறு தொந்தரவுகள் இருந்து கொண்டே இருப்பது போல உணர்வீர்கள். நன்றாக இருந்தாலும் கூட அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாகிக் கொண்டே இருப்பீர்கள். சனி 8 இல் இருப்பதால் மனம் ஒருவிதமாகத் தான் இருக்கும். 30 வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பல், வாய், அசிடிட்டி, சைனஸ், ஒற்றை தலைவலி, நரம்பு தொடர்பான விஷயங்களைப் பாரத்துக் கொள்ள வேண்டும்.
கவனம்
தேவையில்லாமல் மற்றவர்களிடம் செல்போன் பேசுவதை தவிர்ப்பது நல்லது. புதிதாக அறிமுகமாகும் நபர், அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகளிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் சிக்கல்கள் வரும். வண்டிகளில் செல்லும்போது சிக்னலில் நிக்காமல் செல்வது, அதீத வேகமாக செல்வது, மற்றவர்களுடன் தர்க்கம் ஏற்படுவது போன்ற நிலைமைகள் இருப்பதால் கவனம் தேவை.
வழிபாடு
எச்சரிக்கையாக இருப்பது நன்மையைத் தரும். நவக்கிரகத்தில் இருக்கும் கேது, குரு பகவான் வழிபாடு நன்மையைத் தரும். நரம்பு தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாதவற்றை யோசிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எதையும் யோசிக்காமல் ஜாலியாக இருப்பது நன்மை பயக்கும். பெற்றோர் பெரியோர் பிஸியாக இருப்பார்கள். நம்மை கண்டுக்காதது போன்ற எண்ணம் தோன்றும்.
அனுகூலம்
குடும்பத்தில் பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். பிள்ளைகள் படிப்பு, தொழில், உத்தியோகத்தில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் பயணம் மேற்கொள்வது, சுற்றுலா செல்வது, தொலைதூர பயணங்கள் போகும் யோகம் உண்டாகும். உறவுக்காரர்களை சென்று பார்த்துவிட்டு வருவீர்கள். மலைக் கோயில்களுக்குச் சென்று வரும் அமைப்பு உள்ளது. உங்களுக்குத் தேவையானவற்றை வாங்கி மகிழ்வீர்கள்.
நல்ல விஷயங்கள்
உங்களிடம் அன்பாக இருப்பவர்களிடம் எல்லாம் அன்பாகப் பழகுவது ஏற்றத்தைக் கொடுக்கும். மனதிற்குப் பிடித்த விஷயங்களைச் செய்து கொள்வது ஏற்றத்தைத் தரும். உங்களை சுற்றி நல்ல விஷயங்களை, நல்ல நபர்களை வைத்துக் கொள்வது நல்லது. 8 இல் நிறைய கிரகங்கள் இருக்கும் போது நிறைய தொந்தரவுகள் அளிக்கும். உங்களிடம் நல்ல உறவுகளில் இருப்பவர்களிடம் உங்கள் நேரத்தைச் செலவிடுவது நல்லது.
-
Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் மிதுன ராசி.. நிறைய டிராவல் பண்ண போறீங்க! -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கொட்டும் லாபம்.. சொத்துகளை வாங்கி குவிக்கும் நேரம் -
Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் மேஷம் ராசி.. 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ் -
தமிழ் புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. இந்த விஷயங்களில் ஜாக்கிரதை -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications