சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வெளிநாடு யோகம்..குபேர பண வரவு யாருக்கு கிடைக்கும்?
சென்னை: சோபகிருது என்றால் மங்கலகரமான செயல்களை செய்யக்கூடிய ஆண்டு. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்திலும் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் புத்தாண்டில் நிறைய மங்கலகரமான செயல்கள் அதிகம் நடைபெறும். சனி, குரு, ராகு கேது ஆகிய நான்கு ராஜ கிரகங்களின் பயணம் தமிழ் புத்தாண்டு நாளில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்வார். ராகு பகவான் ஐப்பசி மாதம் வரை மேஷ ராசியிலும் கேது பகவான் ஐப்பசி மாதம் வரை துலாம் ராசியில் பயணம் செய்வார். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர்.
நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சியாகும் சோபகிருது புத்தாண்டில் பல சுப காரியங்கள் நிகழப்போகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும் யாருக்கெல்லாம் நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும் பண வருமானம் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே..சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! உங்களுக்கு இது அற்புதமான பலன்களை தரப்போகும் ஆண்டாக அமையப்போகிறது. தொழில்,வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு குரு ராகு இணைவினால் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் புரமோசன் கிடைக்கும். ஜென்ம ராசியில் உள்ள குரு பகவானின் பார்வை 5,7,9ஆம் வீடுகளின் மீது விழுகிறது உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடி வரும். மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும். மாணவ மாணவிகளுக்கு நினைத்த கல்லூரிகளின் படிக்க இடம் கிடைக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும். நல்ல உணவுகளை சாப்பிடுங்கள். பெண்கள் எதையும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் தொடர்பான நோய்கள் வந்து நீங்கும். முன்னோர்களின் ஆசியால் புத்திரபாக்கியம் கைகூடி வரும். சிவ ஆலயங்களில் அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கிக்கொடுங்கள்.செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வணங்குங்கள். கஷ்டங்கள் கவலைகள் நீங்கும் நிறைய நல்லது நடைபெறும்.

ரிஷபம்
சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே..தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான புத்தாண்டாக அமையப்போகிறது. எதையும் மனதிற்கு வைத்து வெற்றி பெற்ற பின்னர் வெளியே சொல்லலாம். கோபம் குரோதம் நீங்கும். அச்சம் நீங்கி ஆற்றல் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். வீட்டிலும் வெளியிடத்திலும் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குரு பகவான் 12ஆம் வீட்டில் உள்ள ராகு உடன் இணைந்து பயணம் செய்வதால் தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் வரப்போகிறது. கால்களில் கவனம் தேவை. வீட்டில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமும் நிதானமும் தேவை. செலவுகள் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். வங்கிக் கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மனதிற்கு ரகசியம் காப்பது நல்லது. மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
உங்கள் ராசி அதிபதி புதன்தான் இந்த ஆண்டு ராஜா என்பதால் உங்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். லாப ஸ்தானமான 11ஆவது வீட்டில் கிரகங்கள் கூடியுள்ளன. வெற்றி மீது வெற்றிகள் தேடி வரப்போகிறது. தெய்வங்களின் அருளாசியும் முன்னோர்களின் அருளும் கிடைக்கப்போகிறது. தொழிலில் வெற்றியும் லாபமும் கிடைக்கப்போகிறது. வேலையில் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். இதனால் வீடு மாற்றம் உண்டாகும். விஐபிகளின் அறிமுகமும் அதனால் வெற்றிகளும் தேடி வரும். திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. அஷ்டமத்து சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கப்போகிறது. ராகு கேது இடப்பெயர்ச்சி வரும் அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. ராகு லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படப்போகிறது. வேலையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். அற்புதமான பலன்களை இந்த சோபகிருது தமிழ் புத்தாண்டில் அனுபவிக்கத் தயாராகுங்கள். அம்மன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அற்புத மாற்றங்கள் ஏற்படும்.

கடகம்
சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் ஆண்டாக உள்ளது. புத்திசாலித்தனம் கூடும். அஷ்டமத்து சனியால் அல்லல் பட்டுக்கொண்டிருப்பீர்கள். பாக்ய ஸ்தானத்தில் ஓராண்டு பயணம் செய்த குருபகவான் புத்தாண்டு முதல் தொழில் ஸ்தானத்தில் உள்ள ராகு உடன் இணைகிறார். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதலாக அக்கறை காட்ட வேண்டும். தேவையற்ற நட்புகள் கூட்டாளிகளை விளக்குங்கள். எதிரிகள் தொந்தரவுகள் நீங்கும். துன்பங்கள் துயரங்கள் முடிவுக்கு வரப்போகிறது. கால்களில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். திருவள்ளூரில் அருள்பாலிக்கும் வீர ராகவ பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும் வியாழக்கிழமையன்று சித்தர்கள் ஆலயம் சென்று வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. மிதுன ராசிக்கு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications