இயர் எண்டர் 2023: அரசியல் தலைவர்களுக்கு கெண்டாதி கெண்டம்.. முன்பே கணித்த பஞ்சாங்கம்
சென்னை: சோபகிருது வருடத்தில் மூத்த அரசியல் தலைவர்களுக்கு கெண்டாதி கெண்டம் ஏற்படும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களுக்கு முன்பே கணித்து எழுதப்பட்ட பல சம்பவங்கள் 2023ஆம் ஆண்டில் நடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே பஞ்சாங்கம் என்பது நவ கிரகங்களின் பயணத்தை வைத்து முன்னோர்களால் கணித்து எழுதப்படுகிறது. அதில் சில விசயங்கள் சொன்னது போலவே நடந்து விடும். அப்படி பல சம்பவங்கள் பஞ்சாங்கத்தில் கணித்தது போலவே 2023ஆம் ஆண்டில் நடந்துள்ளன.

சோபகிருது வருட பஞ்சாங்கத்தில் நல்ல மழை பொழியும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அதிக அளவில் மழை பெய்து வீணாக கடலில் கலக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில தலைநகர், மாவட்ட தலைநகரங்களில் அதிக மழை காரணமாக பல அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மழை நீரால் சூழப்படும் என்று கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் பெய்த மழையால் சென்னையில் பல குடியிருப்புகள் மூழ்கியது மட்டுமல்லாது வாகனங்களும் மூழ்கின வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
ஏழை எளிய மக்களுக்கு வழக்குகளில் நீதி கிடைக்கும். பாலியல் தொல்லை செய்பவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும். பெண்களுக்கு பல நல்ல சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே போலவே தற்போது நமது நாட்டில் தண்டனை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களின் தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை வழங்க புதிய சட்டங்கள் வகை செய்கின்றன.
இதேபோல் பயங்கரவாதம், வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான வழக்குகளில் தண்டனை நிரூபிக்கப்பட்டால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதாவில் அம்சங்கள் இடம்பிடித்துள்ளன.
புது வகை வைரஸ் நோய் பரவும் என்று கணிக்கப்பட்டுள்ளது போல தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. கால்நடைகளை கடுமையான நோய் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மூத்த வயதுடைய அரசியல் தலைவர்களுக்கு கெண்டாதி கெண்டம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல தலைவர்களுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று மீண்டனர். அதே நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலையில் மரணமடைந்துள்ளார்.
பழம்பெரும் அரசியல்வாதிகளுக்கு உடல் நலம் பாதிக்கும். அரசியல் குழப்பமும் உண்டாகும் என்று பஞ்சாங்கத்தில் கணித்து எழுதப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications