தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாலங்களில் ஒன்று.. இனி வாகன ஓட்டிகள் வியக்க போறாங்க.. எங்கே தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாலம் காட்டாங்குளத்தூர் அருகே வர உள்ளது. கிளாம்பாக்கம் வரை இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது. உயர்மட்ட வழிசாலையாக இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது.

கிளம்பாக்கம் மற்றும் காட்டாங்குளத்தூர் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடப் பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே உள்ள போக்குவரத்து நெருக்கடிகள் வரும் ஆண்டுகளில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இறுதி விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது. திட்டம் செயல்படுத்தப்பட்டதும் சென்னையை விட்டு வெளியேறுவது.. சென்னையை நோக்கி செல்வது இனி எளிதாகும்.

automobile chennai


சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தமிழ்நாடு வந்த நிலையில் இந்த திட்டம் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இந்த பாலத்தின் கீழ் திரும்பி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையலாம். NHAI வெளியிட்ட தகவலின்படி, இது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திட்டமாகும். ஆரம்பத்தில், தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூர் வரை உயர்த்தப்பட்ட தாழ்வாரம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இடையில் வரவிருக்கும் பெருங்குளத்தூர் மேம்பாலம் உட்பட பல கட்டமைப்புகள் இருப்பதால் அங்கே அமைக்க முடியாது.

எனவே, இப்போது கிளாம்பாக்கம் மற்றும் காட்டாங்குளத்தூர் இடையே ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி போன்ற போக்குவரத்து இடையூறுகளை உள்ளடக்கிய ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கே போக்குவரத்து நெரிசல் குறையும்.

போக்குவரத்து நெரிசல் காட்டாங்குளத்தூருக்கு அப்பாலும் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் காட்டாங்குளத்தூருக்கு அப்பாலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போதுள்ள கட்டமைப்புகள் எதுவும் இடிக்கப்படாமல் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன், பேருந்துகள் அதன் கீழே யு-டர்ன்களில் செல்லலாம் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநில அரசும் என்ஹெச்ஏஐயும் இத்திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று ஆலோசித்து வருகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றன. எனவே, இந்த திட்டத்தைத் தொடங்கும்போது, ​​பொதுமக்களுக்கு அதிகமாக சிரமம் ஏற்படாத வகையில் இந்த திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

போக்குவரத்து மேலும் குறையும்: இங்கே டிராபிக்கை குறைக்க.. சென்னையில் அமைக்கப்பட உள்ள 10 வழி சாலை இந்தியாவிலேயே பெரிய சாலையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் அமைக்கப்படும் சாலைகளில் மட்டுமன்றி.. உலகில் அமைக்கப்படும் சாலைகளிலேயே பெரிய ரிங் ரோடு சாலையாக இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 132.87 கிமீ தூரத்திற்கு இந்த சாலை கட்டப்பட உள்ளது. சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPRR) என்பது, எண்ணூர் துறைமுகம் - மகாபலிபுரத்தை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் 10 வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச் சாலையாகும். காட்டுப்பள்ளி வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது.

5 பிரிவுகளைக் கொண்ட இந்த புதிய கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே சென்னையின் 4வது ரிங் ரோடாக இருக்கும். சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவொயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இந்த விரைவுச்சாலை கட்டுமானத்திற்கு 2025 ஆம் ஆண்டு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. NHAI இன் கட்டுப்பாட்டின் கீழ் கட்டுமானத்தில் உள்ள பெங்களூரு சென்னை விரைவுச்சாலை மற்றும் சித்தூர் - தச்சூர் விரைவுச்சாலை திட்டங்களுடன் இது இணைக்கப்படும். அதன் விரிவான திட்ட அறிக்கை (DPR) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+