“சூர்யாவை நான் லவ் பண்ணுனேன்.. நட்பை முடித்துக்கொண்டது இதனால் தான்” – வெளிப்படையாக பேசிய இயக்குநர் அமீர்
சென்னை: நடிகர் சூர்யாவுடன் நீண்ட காலம் நெருக்கமான நட்பாக பழகியிருந்த இயக்குநர் அமீர், அந்த நட்பை ஏன் முடித்துக்கொண்டார் என்பதை சமீபத்தில் அளித்த ஒரு யூடியூப் பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். 'மௌனம் பேசியதே' படம் ரீரிலீஸ் ஆகும் சூழலில், அந்த காலகட்ட நினைவுகளையும், சூர்யாவுடனான உறவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மௌனம் பேசியதே படம்
தமிழ் சினிமாவில் அமீரை இயக்குநராக அடையாளம் காட்டிய படம் 'மௌனம் பேசியதே' தான். 2002-ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம், சூர்யாவின் கேரியரில் முக்கியமான ஒரு turning point ஆக அமைந்தது. காதலை சத்தமில்லாமல் சொல்லும் ஒரு மென்மையான காதல் கதையாக இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் மூலம் சூர்யாவும் 'next level' நடிகராக அடையாளம் காணப்பட்டார் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் இந்த படம் ரீ ரிலீஸ் ஆவது குறித்து இந்த படத்தில் நடித்த சூர்யா மற்றும் நடிகை லைலா போன்ற பலரும் வீடியோக்கள் வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து மௌனம் பேசியதே இயக்குநர் அமீர் இந்த படத்தை பற்றி சில நினைவுகளை பேட்டிகளில் பேசியிருக்கிறார். அதில் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யாவ என்னுடைய நெருங்கிய நண்பர்.
நான் உதவி இயக்குனராக அறிமுகமான கட்டத்தில் அவரும் சினிமாவில் அப்போதுதான் நடித்துக் கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் அவ்வளவு பேசிக்கொண்டே இருப்போம். நான் அவரை அவ்வளவு ரசிப்பேன். அவரை லவ் பண்ணுனேன் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு எனக்கு அவரை பிடிக்கும். எங்கே போனாலும் என்னை தான் கூப்பிடுவார். நானும் அவரை தான் கூப்பிடுவேன். அந்த காலகட்டம் எல்லாம் ரொம்ப ஜாலியாக இருந்தது.

பிறகு, "படம் வெளியான நாள் நான் மதுரையில் இருந்தேன். இரவு படம் பார்த்துவிட்டு சூர்யா எனக்கு போன் பண்ணினார். 'படம் நல்லா இருக்கு, மக்கள் கொண்டாடுறாங்க'ன்னு சந்தோஷமாக சொன்னார். நான் 'அப்படியா?'ன்னு சாதாரணமாக கேட்டேன். நான் உற்சாகமாக பேசுவேன் என்று அவர் எதிர்பார்த்தார் போல. அந்த ஒரு சின்ன விஷயமே அவருக்கு கொஞ்சம் hurt ஆன மாதிரி தெரிந்தது" என்று அமீர் கூறியிருக்கிறார். அந்த ஒரு சம்பவம் மட்டும் தான் பிரச்சனைக்குக் காரணம் இல்லை என்றும், காலப்போக்கில் இருவருக்குள்ளும் ஒரு distance உருவாகி வந்ததாகவும் அமீர் கூறியிருக்கிறார்.
சூர்யா செய்த உதவி
அதுபோல சூர்யா செய்த உதவிகள் பற்றி நிச்சயம் அமீர் பேசி இருக்கிறார். "நந்தா படத்தின் போது எனக்கும் சூர்யாவுக்கும் நல்ல நட்பு இருந்தது. அவரை நான் ஒருபோதும் 'ஹீரோ' என்று பார்த்தது இல்லை. நண்பனா தான் பார்த்தேன். நேரில் சந்தித்தால் 'வாங்க ஜீ'ன்னு தான் பேசுவோம். ஒருமுறை எனக்கு கடுமையான காய்ச்சல் வந்த போது, மருத்துவமனையில் இருந்து என்னை கூட்டிக்கொண்டு போய் மறுபடியும் காலையில் விட்டுவந்தவர் சூர்யா. அந்த அளவுக்கு ஒரு close friendship எங்களுக்குள் இருந்தது" என்று அவர் கூறுகிறார்.
ஆனால் சினிமா உலகில் சில மரபுகள், விதிமுறைகள் இருக்கின்றன. "சூர்யாவை 'சார்' என்று அழைக்க வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அது எனக்கு மனசுக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. என் இயல்பு அப்படி இல்லை. என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை" என்று அமீர் நேர்மையாக சொல்கிறார்.
இதன் பிறகே அவர் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார். "நான் யாரிடமிருந்தும் விலகுகிறேன் என்றால், அது அவர்கள் தப்புனால இல்ல. அது என் தப்பாக தான் இருக்கும். அதை உணர்ந்த பிறகே நான் விலகுகிறேன். சூர்யாவிடம் இருந்து விலகினதும் அப்படித்தான். பாலா, சீமான் ஆகியோரிடமிருந்தும் நான் இப்படித்தான் விலகினேன்.
Thangar Bachan: தமிழில் மந்திரங்கள் ஓத… இயக்குநர் தங்கர் பச்சான் மகன் விஜித் திருமணம்.. திருப்பதியில் கோலாகலம்
தமிழ் தேசியம் போன்ற கருத்துகளில் ஆரம்பத்தில் நாங்கள் ஒரே line-ல் இருந்தாலும், பின்னாடி அரசியல் பார்வையில் வித்தியாசம் வந்தது. சூர்யா இப்போது ஒரு பெரிய உயரத்தில் இருக்கிறார். அவரோடு இருந்துகொண்டு அவருக்கு தொந்தரவாக இருக்க நான் விரும்பவில்லை. அதனால் நானே பின்வாங்கினேன்" என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
-
அந்த படத்தில் பிகினியில் நடித்ததால் நடந்த சம்பவம்! பல வருடங்களுக்கு பிறகு வருத்தத்தை பகிர்ந்த பிரியா மணி -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி












Click it and Unblock the Notifications