Selvaraghavan : சுற்றி நடந்த துரோகம்.. இது கடவுளின் நியதி.. செல்வராகவன் திடீர் போஸ்ட்! விஷயம் இதுதானா?
சென்னை: இயக்குனர் செல்வராகவன் அவருடைய இரண்டாவது மனைவி கீதாஞ்சலியை பிரிய போகிறாரா? என்று கேள்விகள் சில நாட்களாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. இந்த நிலையில் செல்வராகவன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு வருத்தமான பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
இயக்குனர், கதை ஆசிரியர், நடிகர் என பல திறமைகளை கொண்ட செல்வராகவன் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி அவர் தத்துவமாக பேசி வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதோடு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிடுவார். ஆனால் இப்போது செல்வராகவன் பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கினர். முதல் படமே அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் நடிகை சோனியா அகர்வாலை அறிமுகம் செய்து வைத்தார். அந்த திரைப்படத்திலும் முதல் படத்தைப் போலவே தன்னுடைய தம்பியைத்தான் நடிக்க வைத்திருந்தார். இந்த படத்தில் போது சோனியா அகர்வாலுடன் காதல் ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்து 7G ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை போன்ற படங்களிலும் சோனியா அகர்வால் நடித்திருந்தார். பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடல் 2019 ஆம் ஆண்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான கீதாஞ்சலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவனின் புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்திருக்கிறார். இதனால் இருவரும் விவாகரத்து செய்து பிரிய போகிறார்களா என்று கேள்விகள் எழுந்து வருகிறது. காரணம் சமீப காலமாகவே திரை பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் போஸ்ட்களை டெலிட் செய்து தாங்கள் பிரிவதை அறிவித்து வருகிறார்கள். அதேபோல இப்போது கீதாஞ்சலியும் செய்கிறாரா என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் செல்வராகவன் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள்.. அப்போது அமைதியா இருங்கள்.
சில காலம் தான். பெரும் மலை பனி போல் போகும், அனைத்தும் சரியாகிவிடும். இது கடவுளின் நியதி என்று செல்வராகவன் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் அன்னை உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி எல்லாம் போஸ்ட் போடுறீங்க என்ன நடந்தது என்று கொஞ்சம் தெளிவா சொல்லுங்க என்று கேட்டு இருக்கிறார்கள்.
Selvaraghavan: செல்வராகவன் இரண்டாவது மனைவியை பிரிகிறாரா? சோசியல் மீடியாவில் கீதாஞ்சலி செய்த செயல்!
இன்னும் சில ரசிகர்கள் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நீங்கள் இன்னும் கடவுளை வெறுக்கவில்லை என்று தெரிகிறது என்றும் பாராட்டி இருக்கிறார்கள். அதோடு சிலர் நீங்கள் சொல்லும் அட்வைஸ் எல்லாம் எங்களுக்கே சொல்வது போல இருக்கிறது உண்மையில் வாழ்க்கையில் நீங்க ரொம்ப அடிபட்டு இருக்கீங்க என்றும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications