Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Draupathi 2 review: திரௌபதி 2 எப்படி இருக்கு? கதையே இதுதான்! படத்தை பார்த்த சௌமியா கொடுத்த ரிவ்யூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி, படத்தை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். அவரது கருத்துகள் தற்போது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடமும் கவனம் பெற்றுள்ளன.

2020ஆம் ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம், சர்ச்சைகளுக்கு நடுவிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. ரிச்சர்ட் ரிஷி, சீலா ராஜ்குமார், கருணாஸ் ஆகியோர் நடித்திருந்த அந்த படம், இயக்குநர் மோகன் ஜியை ஒரு தனித்துவமான கதை சொல்லல் கொண்ட இயக்குநராக அடையாளப்படுத்தியது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாகவே திரௌபதி 2 உருவாகியுள்ளது.
வரலாற்றுப் பின்னணியுடன் பான் இந்திய படம்.

Draupathi Mohan G

இந்த முறை திரௌபதி 2, முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. திருவண்ணாமலையை மையமாக வைத்து, வரலாற்றுப் பின்னணியில் அமைந்த ஒரு பெரிய கதையை இந்த படம் பேசுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக படம் தயாராகியுள்ளது

திரௌபதி 2 நடிகர்

இந்த படத்தில் ரக்ஷனா இந்து, ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி ஷர்மா, அருணோதயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரௌபதி 2 ரிவ்யூ

திரௌபதி படத்தில் ஸ்பெஷல் காட்சியை பார்த்த சௌமியா அன்புமணி பேசுகையில்,
"இந்த படத்தை வெறும் சினிமா என்று சொல்ல முடியாது. இது வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு காவியம். திருவண்ணாமலையை மையமாக வைத்து இதுவரை தமிழ் சினிமாவில் இப்படியான கதைக்களம் வந்ததில்லை. அதற்காக முதலில் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் வாழ்த்துகள்"
என்று தெரிவித்தார்.

சௌமியா அன்புமணி பாராட்டு

மேலும் அவர், "சம்மூரராயர்கள், காடவராயர்கள் போன்ற சிற்றரசர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை பற்றிய குறிப்புகள் பாடப்புத்தகங்களில் கூட இல்லை. முகலாய பேரரசு தமிழகத்திற்குள் வர முடியாததற்கு காரணமாக இருந்த தமிழ் மன்னர்களின் வீரத்தை இந்த படம் பதிவு செய்துள்ளது"
என்று கூறினார்.

வீர வல்லாளன், காடவராயர்கள் போன்ற தமிழ் மன்னர்களின் வீரத்தை பதிவு செய்ததற்காக இயக்குநர் மோகன் ஜிக்கு அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை

மோகன் ஜியின் படங்களில் பெண்களுக்கு எப்போதும் வலுவான இடம் இருக்கும் என்றும், திரௌபதி 2 அதற்கு விதிவிலக்கல்ல என்றும் சௌமியா அன்புமணி கூறினார்.
"நேர்மை, துணிச்சல், வீரம் கொண்ட ஒரு வீரமங்கையாக பெண்களை அவர் காட்டுவார். இந்த படத்திலும் ஒரு நேர்மையான, வீரமிக்க ராணி கதாபாத்திரம் முக்கிய இடம் பிடிக்கிறது"
என்றார்.

நெருப்பில் பிறந்த திரௌபதி

"வீரம் என்பது ஒரு கலை. அந்த வீரத்தையும் நேர்மையையும் கொண்ட பெண்ணே திரௌபதி. நெருப்பில் இருந்து பிறந்த திரௌபதி, எப்படி நெருப்பாகவே வாழ்ந்து மறைந்தார் என்பதே இந்த படத்தின் மையமாக இருக்கிறது" என்று அவர் விளக்கினார்.

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்றும், நடிப்பில் எந்த செயற்கைத்தனமும் தெரியவில்லை என்றும் சௌமியா அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில், திரௌபதி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, திரௌபதி 2 ஒரு வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய முக்கியமான திரைப்படமாக உருவாகியுள்ளது என்றே முன்னோட்ட பார்வையாளர்களின் கருத்துகள் தெரிவிக்கின்றன. படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், சௌமியா அன்புமணியின் இந்த பாராட்டு விமர்சனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+