Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

STR : அரசியலும் தெரியாது, அனுபவமும் இல்ல.. விஜய்க்கு சப்போர்ட் பண்ண காரணமே இதுதான்! சிம்பு ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்கி, திரையுலகில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அரசியல் பின்னணியுடன் உருவான இப்படத்தில் சில காட்சிகளால் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்தது. இதன் காரணமாக படம் வெளியீடு தள்ளிப் போய், சட்ட ரீதியான போராட்டம் வரை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சினிமா துறையிலிருந்து பெரும்பாலானோர் இந்த பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசாமல் அமைதியாக இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, விஜயுடன் நெருக்கமாக பழகிய பல நடிகர்கள் கூட கருத்து தெரிவிக்க தயங்கியுள்ளனர்.

Vijay Jana nayagan STR Silambarasan

முதல் நாளிலிருந்தே குரல் கொடுத்தவர் - சிம்பு

இத்தகைய சூழலில், நடிகர் சிம்பு மட்டும் 'ஜனநாயகன்' பிரச்சனை ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்ட செய்தி வெளியான உடனே, சிம்பு சமூக வலைதளங்களில் தனது ஆதரவை பதிவு செய்தார்.

"ஒரு நடிகர் இத்தனை வருடங்கள் சினிமாவுக்கு கொடுத்த உழைப்பின் பலனை, ஒரே ஒரு படத்தின் பிரச்சனை காரணமாக மறுக்கக் கூடாது" என்ற அவரது கருத்து, விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சிம்பு விளக்கம்

சமீபத்திய பேட்டியில் சிம்பு தான் விஜய்க்காக எதற்கு ஆதரவு தெரிவித்தேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார், "எனக்கு அரசியல் பற்றி பெரிய புரிதல் கிடையாது. நான் அரசியல் விமர்சகர் இல்லை. நான் ஒரு நடிகன். ஒரு நடிகன் இன்னொரு நடிகனுக்கு துணை நிற்பது தான் இங்கே முக்கியம். விஜய் சினிமாவில் இத்தனை வருடங்கள் உழைத்தவர். அவர் நடித்த ஒரு படம் வெளிவராமல் சிக்கலில் இருக்கும்போது, அவருக்கு ஆதரவாக பேசுவது என் கடமை போல எனக்குத் தோன்றியது" என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், தன்னுடைய ஆதரவு அரசியல் நோக்கத்தில் அல்ல, சினிமா துறையில் உள்ள சக நடிகருக்கான மனித ரீதியான ஆதரவு தான் என்பதை சிம்பு தெளிவுபடுத்தியுள்ளார்.

திரையுலகின் இன்னொரு முகம்

'ஜனநாயகன்' பிரச்சனை, திரையுலகில் அரசியல் தொடர்பான விஷயங்களில் பேசும் போது நடிகர்கள் எதிர்கொள்ளும் தயக்கம், பயம் ஆகியவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பலர், "இது சட்டப் பிரச்சனை; இதில் பேசினால் எதிர்வினைகள் வரும்" என்ற காரணத்தால் மௌனம் காக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், சிம்பு போன்ற சிலர் மட்டும் எந்த தயக்கமும் இல்லாமல் பேசுவது, திரையுலகில் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ரசிகர்களிடையே உருவான புதிய பார்வை

சிம்பு தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக பேசுவதால், அவரைப் பற்றிய பார்வையும் ரசிகர்களிடையே மாறியுள்ளது. "போட்டி, ஈகோ எல்லாம் விட்டு விட்டு, சக நடிகருக்கு துணை நிற்பது தான் உண்மையான நட்பு" என்று பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், "இந்த விவகாரம் சினிமா துறையில் உள்ள உறவுகள் எவ்வளவு நுணுக்கமானவை என்பதையும் காட்டுகிறது" என்ற கருத்துகளும் எழுந்துள்ளன.

Jana nayagan: ஜனநாயகன் சென்சார் பற்றிய கேள்வி.. டக்குனு வையாபுரி கொடுத்த பதிலடி.. விஜய்க்கு நோஸ்கட்
'ஜனநாயகன்' படம் எப்போது திரைக்கு வரும் என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், இந்த பிரச்சனை ஒரு திரைப்படத்தை தாண்டி, திரையுலகில் அரசியல் - கலை - மனித உறவுகள் ஆகியவை எப்படி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த சூழலில், முதல் நாளிலிருந்தே விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் சிம்புவின் நிலைப்பாடு, அவரை வெறும் நடிகராக அல்ல, ஒரு சக கலைஞனுக்கு துணை நிற்கும் நண்பராகவும் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+