80 டாலருக்கு கீழே விலை சரிந்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்....
ஆக கச்சா எண்ணெய் விலை குறைவு என்பது உலக அளவில் தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள மந்தத்தின் அடையாளம் தான். இது 80 டாலருக்குக் கீழே வந்தால் தொழில்துறைகளின் நிலைமை படுமோசம் என்று அர்த்தம். அதாவது பல நாடுகளின் பொருளாதாரங்களுக்கு சீக்கு பிடிக்க ஆரம்பித்துள்ளதாக அர்த்தம். இதனால் தான் 80 டாலருக்கு கீழே விலை சரிந்தால் பங்குச் சந்தைகளில் அதன் தாக்கம் எதிர்மறையானதாக, மிகக் கடுமையானதாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.
தங்கத்தின் நிலையும் இதே தான். பொருளாதாரம் நல்லா இருந்தால் மக்களிடம் கையில் காசு புழங்கும். மக்கள் தங்க நகைகளை வாங்குவதும் அதிகமாக இருக்கும். நிலைமை சரியில்லாவிட்டால் இருக்கும் நகையை முத்தூட் பைனான்சுக்கு போகாமல் காப்பதே பெரும்பாடாக இருக்கும்.
அதே போல பொருளாதார நிலைமை நன்றாக இருந்தால் டாலர்களில் முதலீடு செய்யும் பெரும் பணக்காரர்களும் நிறுவனங்களும், நிலைமை சரியில்லாவிட்டால் அதை தங்கத்தில் போட்டு வைப்பது வழக்கம். இது தான் கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. இதனாலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.
ஆனால், விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததாலும், நகைகள் வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாலும், பல நாடுகளில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நிலை நிலவுவதாலும், வாங்கும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாக இருப்பதாலும் தங்கத்துக்கு டிமாண்ட் சரிந்துவிட்டது. இதனால் தங்கத்தில் முதலீடு என்பது பெரும் பணக்காரர்களுக்கு பெரிய அளவில் லாபம் தரவில்லை. இதனால் அவர்களும் அந்த முதலீட்டைத் திரும்பப் பெற்று மீண்டும் டாலர்களிலேயே (டாலர்களில் வரும் பங்குகள், பத்திரங்கள்) முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.