Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: இலவசமாக 1.5 கோடி 5 ஸ்டார் ஏசிக்களை வழங்கும் மோடி அரசு? தீயாக பரவும் தகவல்.. உண்மை என்ன!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு புதிதாக 'பிஎம் மோடி ஏசி யோஜனா 2025' என்ற திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் இதன் கீழ் இலவசமாக ஏசி யூனிட்கள் வழங்கப்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இது உண்மை தானா.. நிஜமாகவே மத்திய அரசு ஏசிக்களை வழங்குகிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த சில நாட்களாக இணையத்தில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது மத்திய அரசு புதிதாக 'பிஎம் மோடி ஏசி யோஜனா 2025' என்ற திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் இதனால் தகுதிவாய்ந்த மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 5 ஸ்டார் ஏசி இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்காக 1.5 கோடி ஏசி யூனிட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Fact Check Govt Giving Free 5-Star AC Under PM Modi AC Yojana 2025 Know the Truth

கோடை ஏசி

கோடை வெயில் படுத்தி எடுத்து வரும் நிலையில், இந்தத் தகவல் இணையத்தில் வேகமாகப் பரவியது. பலரும் இது உண்மை என்றே நினைத்தனர். வெயில் அதிகரித்து வரும் சூழலில் இத்திட்டத்தில் எப்படி புதிய ஏசி யூனிட்களை வாங்குவது என்றும் கூட மக்கள் தேட தொடங்கினர். இதனால் இணையத்தில் இது டிரெண்டானது.

அதாவது பிரதமர் மோடியின் ஏசி யோஜனா திட்டத்தின் கீழ் 1.5 கோடி ஏசி யூனிட்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்பட்டது. அதிலும் அடுத்த மாதம், அதாவது மே 2025 முதல் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய மின்சார துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் இத்திடத்திற்குத் தேவையான ஏசி யூனிட்களை ஏற்கனவே தயார் செய்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இணையத்தில் பரவிய தகவல்

இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்களைப் பரப்பினர். அதன்படி நெட்டிசன் ஒருவர், "மத்திய அரசு பிரதமர் மோடி ஏசி யோஜனா 2025 இன் கீழ் அனைவருக்கும் இலவச 5 நட்சத்திர ஏசி வழங்கும். இந்தத் திட்டம் மே மாதம் விரைவில் தொடங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக 1.5 கோடி ஏசிகள் தயார் செய்யப்பட்டுள்ளதால் நாட்டில் மிகப் பெரிய ஏசி பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் ஏசி வேண்டும் என்றால் நீங்கள் முறையாகக் கோரிக்கை விடுக்க வேண்டும். பிறகு 30 நாட்களுக்குள் உங்களுக்கு ஒரு புதிய ஏசி வழங்கப்படும்.. இந்திய அரசு விரைவில் அனைவருக்கும் இலவச ஏசி வழங்கும்! கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கவும் 5 ஸ்டார் ஏசிக்களை பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை என்ன

இதுபோன்ற பதிவுகள் இணையத்தில் வேகமாகப் பரவியது. இதனால் பலரும் இதை உண்மை என நம்பத் தொடங்கினர். பலரும் இதை எப்படி அப்ளை செய்ய வேண்டும் என்றும் தேட தொடங்கினர். ஆனால், இது உண்மை தானா என நாம் தேடியபோது இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நம்மால் பார்க்க முடியவில்லை. அதேநேரம் மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவான பிஐபி இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.

விளக்கம்

அதில் பிஐபி தங்கள் ட்விட்டரில், "பிரதமர் மோடி ஏசி யோஜனா 2025 திட்டத்தின் கீழ், அரசு இலவச 5 ஸ்டார் ஏசி யூனிட்களை வழங்கவுள்ளதாகவும் இதற்கு 1.5 கோடி ஏசிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இந்தத் தகவல் போலியானது. இலவசமாக 5 ஸ்டார் ஏசிக்களை வழங்கும் வகையில் எந்தவொரு திட்டமும் மின்சார அமைச்சகத்தால் அறிவிக்கப்படவில்லை" என்று விளக்கமளித்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

"பிஎம் மோடி ஏசி யோஜனா 2025" திட்டத்தின் கீழ் 1.5 கோடி ஏசி யூனிட்களை இலவசமாகத் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.

முடிவு

மத்திய அரசிடம் அதுபோல எந்தவொரு திட்டமும் இல்லை.. இது பொய்யான தகவல் என பிஐபி விளக்கமளித்துள்ளது.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+