வெறும் ஜாதிக்காய்.. கழுத்து சுளுக்கை அசால்ட்டா விரட்டும் டிப்ஸ்.. அந்த தலைகாணியை தூக்கி போட்டுருங்க
சென்னை: கழுத்துப் பிடிப்பு அல்லது கழுத்து சுளுக்கு ஏற்பட்டுவிட்டால் இதை அலட்சியப்படுத்தவே கூடாது என்கிறார்கள்.. இதன் அறிகுறி என்ன? கழுத்து பிடிப்பு ஏன் ஏற்படுகிறது? நிவாரணம் என்ன தெரியுமா?
கழுத்து சுளுக்கு ஏற்பட எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.. நாம் முறையாக தூங்காவிட்டாலும் இப்படி கழுத்து பிடிப்பு வந்துவிடும்.

முதுகு பகுதி: உட்கார்ந்தபடியே வேலை பார்க்கும் நபர்கள், குறிப்பாக, ஐடி ஊழியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கழுத்து வலி, கழுத்து பிடிப்பு ஏற்பட்டுவிடுவது இயல்பான ஒன்றுதான்.. கழுத்து பகுதி என்றாலும், முதுகுப்பகுதியின் மேல் பகுதியில், சதைப்பிடிப்புகள் தோன்றிவிடும்.
அதேபோல, தலையில், அல்லது கழுத்து பகுதிகளில் காயம் ஏற்பட்டிருந்தாலும் கழுத்து வலி ஏற்படலாம்.. நீண்ட நேரம் குனிந்திருந்தாலும் வலி ஏற்படலாம்.. வயது காரணமாக ஏற்படும் எலும்புத் தேய்மானத்தினாலும், கழுத்து வலி ஏற்படலாம். இப்படி வலி ஏற்பட்டால், சில சமயம் மூச்சு விட முடியாமல் சிரமம் வந்துவிடும்.. சில சமயம் எதையும் சாப்பிடக்கூட முடியாது.
கழுத்து வலி: இந்த கழுத்து வலியோ, அல்லது கழுத்து சுளுக்கோ ஏற்பட்டால், வெந்நீரில் அல்லது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் தரலாம்.. ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி, குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் வலி ஏற்பட்ட இடத்தில் வைத்து ஒத்தடம் தரலாம்..
தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்தால், கழுத்து வலிகள் ஏற்படாது. டென்ஷன், கோபம், பதற்றம், மன அழுத்தம் இல்லாமல் அமைதியான மனநிலையில் வேலை பார்க்க வேண்டும். இதற்கு யோகாவும், தியானமும் கட்டாயம் உதவுகின்றன.
என்ன செய்யலாம்: ஒரே நிலையில் கழுத்தை வைத்திருக்காமல், மாறி மாறி அசைத்து கொண்டேயிருக்க வேண்டும்.. தசைகளுக்கு இறுக்கம் தருவதுபோல செயல்களை செய்ய வேண்டும்.. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து பணிபுரிய வேண்டும். முதுகு வளைந்தவாறு உட்கார்ந்தால், நிறைய பிரச்சனைகள் வந்துவிடும். ஒரே ஒரு தலைகாணியை வைத்து படுத்தாலே போதும். கடினமான தலைகாணியாக இருந்தால், அதை உடனே மாற்றிவிட வேண்டும்.
அதேபோல, கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டால், இதற்கு ஜாதிக்காய் உதவுகிறது.. ஜாதிக்காயை உடைத்து சிறிதளவு பாலுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இதை கொதிக்க வைத்து, சுளுக்கு உள்ள இடத்தில் மெதுவாக தடவி பற்றுப்போட்டால் சுளுக்கு சரியாகிவிடும். இப்படி 3 நாட்கள் செய்து வர சுளுக்கு சரியாகிவிடும்.
கல் உப்பு: அல்லது கல் உப்பு + பூண்டு இரண்டையும் இடித்து பொடித்து, சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பற்று போடலாம்.. முருங்கை பட்டையுடன் சிறிது பெருங்காயம், கடுகு, சுக்கு சேர்த்து அரைத்து, சூடு செய்து பற்று போடலாம்..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications