சப்பாத்தி மாவை பிசைந்து பிரிட்ஜில் வைக்கிறீங்களா.. ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்!
சென்னை: சப்பாத்தி மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்தால் உடலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா?
சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புவோர் என அரிசிக்கு பதிலாக கோதுமையை எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு அவர்கள் எடுத்துக் கொள்வது கோதுமை சப்பாத்திதான்.

அப்படிப்பட்ட சப்பாத்தியை மூன்று வேளையும் சாப்பிட சிலர் விரும்புகிறார்கள். சப்பாத்தி செய்வது பெரிய பிராசஸ். அதாவது மாவை பிசைந்து அதை ஊற வைத்து, பிறகு திரட்டி தோசைக் கல்லில் போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு எடுக்க வேண்டும்.
சப்பாத்தியை 3 வேளையும் பிசைந்து வைப்பதற்கு பதில் குறிப்பிட்ட மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்து சிலர் எப்போது தேவையோ அப்போது எடுத்து திரட்டி சப்பாத்தியாக போட்டு எடுக்கிறார்கள். இது போல் சப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்கிறார்கள். சாப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைத்தால் பாக்டீரியா வளரும்.
இதை நாம் சாப்பிடுவதால் உடலுக்கு உபாதை ஏற்படும் என்கிறார்கள். வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படும். பிசைந்த மாவை நீண்ட நேரம் பிரிட்ஜில் வைப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் கரைந்துவிடும். பிரிட்ஜில் மாவை வைக்கும் போது பிரிட்ஜில் இருந்து தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மாவுக்குள் நுழைந்துவிடும்.
இதனால் வயிற்று வலி, மலச்சிக்கல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். பிரிட்ஜில் வைத்த மாவில் சப்பாத்தி செய்வதால் மாவின் தன்மை கடினமானதாக மாறி சப்பாத்தி ரஃப்பாக இருக்கும். அதன் சுவையிலும் மாறுபாடு இருக்கும். சிலர் காற்று புகாத டப்பா, அலுமினியம் பாயில், ஜிப்லாக் கவர்களில் வைக்கிறார்கள்.
இது ஓரளவுக்கு செய்யலாம். ஆனால் இதுவும் மாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். அந்த மாவில் மழைக்காலங்களில் லிஸ்ட்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் எனும் பாக்டீரியா உருவாக வாய்ப்புள்ளது. குறைந்த வெப்பநிலையில் உருவாகும் இந்த பாக்டீரியா உணவு பொருளுக்குள் நுழைந்து காய்ச்சல் , தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளை கொடுக்கும்.
சப்பாத்தி மாவை பிசைந்த அன்றே சாப்பிடுவது நல்லது. மீந்த மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது தவறு. இது என்றில்லை, சாம்பார், ரசம், சட்னி உள்ளிட்டவைகளை கூட அன்று அன்று செய்து அன்றே மீதமில்லாமல் சாப்பிட்டு விடுவதுதான் நல்லது. அதை விட்டுவிட்டு பிரிட்ஜில் வைத்து அதை சூடு செய்து சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications