சப்பாத்தி மாவை பிசைந்து பிரிட்ஜில் வைக்கிறீங்களா.. ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்!
சென்னை: சப்பாத்தி மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்தால் உடலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா?
சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புவோர் என அரிசிக்கு பதிலாக கோதுமையை எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு அவர்கள் எடுத்துக் கொள்வது கோதுமை சப்பாத்திதான்.

அப்படிப்பட்ட சப்பாத்தியை மூன்று வேளையும் சாப்பிட சிலர் விரும்புகிறார்கள். சப்பாத்தி செய்வது பெரிய பிராசஸ். அதாவது மாவை பிசைந்து அதை ஊற வைத்து, பிறகு திரட்டி தோசைக் கல்லில் போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு எடுக்க வேண்டும்.
சப்பாத்தியை 3 வேளையும் பிசைந்து வைப்பதற்கு பதில் குறிப்பிட்ட மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்து சிலர் எப்போது தேவையோ அப்போது எடுத்து திரட்டி சப்பாத்தியாக போட்டு எடுக்கிறார்கள். இது போல் சப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்கிறார்கள். சாப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைத்தால் பாக்டீரியா வளரும்.
இதை நாம் சாப்பிடுவதால் உடலுக்கு உபாதை ஏற்படும் என்கிறார்கள். வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படும். பிசைந்த மாவை நீண்ட நேரம் பிரிட்ஜில் வைப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் கரைந்துவிடும். பிரிட்ஜில் மாவை வைக்கும் போது பிரிட்ஜில் இருந்து தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மாவுக்குள் நுழைந்துவிடும்.
இதனால் வயிற்று வலி, மலச்சிக்கல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். பிரிட்ஜில் வைத்த மாவில் சப்பாத்தி செய்வதால் மாவின் தன்மை கடினமானதாக மாறி சப்பாத்தி ரஃப்பாக இருக்கும். அதன் சுவையிலும் மாறுபாடு இருக்கும். சிலர் காற்று புகாத டப்பா, அலுமினியம் பாயில், ஜிப்லாக் கவர்களில் வைக்கிறார்கள்.
இது ஓரளவுக்கு செய்யலாம். ஆனால் இதுவும் மாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். அந்த மாவில் மழைக்காலங்களில் லிஸ்ட்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் எனும் பாக்டீரியா உருவாக வாய்ப்புள்ளது. குறைந்த வெப்பநிலையில் உருவாகும் இந்த பாக்டீரியா உணவு பொருளுக்குள் நுழைந்து காய்ச்சல் , தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளை கொடுக்கும்.
சப்பாத்தி மாவை பிசைந்த அன்றே சாப்பிடுவது நல்லது. மீந்த மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது தவறு. இது என்றில்லை, சாம்பார், ரசம், சட்னி உள்ளிட்டவைகளை கூட அன்று அன்று செய்து அன்றே மீதமில்லாமல் சாப்பிட்டு விடுவதுதான் நல்லது. அதை விட்டுவிட்டு பிரிட்ஜில் வைத்து அதை சூடு செய்து சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications