முடக்குவாதத்தை முடக்கும் முள்ளங்கி இலை.. மூலத்தை விரட்டும் முள்ளங்கி கீரை.. முள்ளங்கியைவிட பெஸ்ட்

உடல் எடை: நார்ச்சத்துக்கள் மிகுந்தும், கலோரி குறைந்தும் உள்ளதால், உடல் எடை குறைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த முள்ளங்கி இலையாகும். எனவே, இந்த முள்ளங்கி இலையில் சூப் வைத்து குடித்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.
முடக்குவாதம் இன்று பெரும்பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த முள்ளங்கி இலை இதற்கும் தீர்வு தருகிறது.. ஆர்த்தரைடிஸ், முடக்குவாதம் பிரச்சினை உள்ளவர்கள், முள்ளங்கி இலையை உணவில் தாராளமாக சேர்க்க வேண்டும்.. இதனால், மூட்டுவலி, மூட்டு எலும்புகளில் ஏற்படும் தொற்றுக்களையும் இந்த இலைகள் சரிசெய்துவிடும்.. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் இந்த இலைகள் குறைத்துவிடும்.
உள்ளுறுப்புகள்: உள்ளுறுப்புகளை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த இலைகள் உதவுகின்றன.. குறிப்பாக பெண்கள் அனைவருமே இந்த இலையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டுமாம். காரணம், பெண்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்குவது ரத்த சோகைதான்.. இந்த இரும்புச்சத்து குறைப்பாட்டை முள்ளங்கி இலைகள் தீர்க்கின்றன..
மலச்சிக்கலையும் தீர்க்கின்றன.. சருமத்தின் ஆரோக்கியத்தையும் காக்கின்றன . முள்ளங்கி இலையை உணவில் அதிகம் சேர்த்து கொள்பவர்களுக்கு அலர்ஜி தொந்தரவுகள் வருவதில்லையாம். இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உடல் கழிவுகளை முழுமையாக வெளியேற்றுகிறது.
சிறுநீரகம்: சிறுநீரகத்தில் தொற்றுக்கள் பாதிக்காத வகையில், இந்த இலைகள் செயல்படுகின்றன.. அதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கீரையாக இது உள்ளது.. இந்த கீரையில் சாறு எடுத்து, வெந்தயத்தை அதில் ஊறவைத்து உலர்த்தி தூள் செய்து, தினமும் 2 வேளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். அதுமட்டுமல்ல, இந்த இலையிலிருந்து 6 ஸ்பூன் அளவுக்கு சாறு எடுத்து குடிக்கும்போது, சிறுநீரக கற்களும் கரைந்துவிடுமாம்..
கல்லீரலுக்கு பலத்தை தருவதால், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த இலையை தவறவிடக்கூடாது.. இதயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற இலை இந்த முள்ளங்கி இலையாகும்.
மூலநோய்: அதேபோல, கடுமையான மூலத்தையும், இந்த இலைகள் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.. காரணம், இதிலுள்ள ஆன்டி - பாக்டீரியல் பண்புகள், மூலத்தால் ஏற்படும் வீக்கத்தையும், தொற்றையும் குறைப்பதில் பெரும்பங்காற்றுகிறதாம்.. எனவே, முள்ளங்கி இலையில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, ஆசன வாய் பகுதியில் தடவிவரும்போது, மூலநோய் தீவிரம் குறையுமாம்.. எரிச்சலும் தணியும் என்கிறார்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications