முடக்குவாதத்தை முடக்கும் முள்ளங்கி இலை.. மூலத்தை விரட்டும் முள்ளங்கி கீரை.. முள்ளங்கியைவிட பெஸ்ட்

உடல் எடை: நார்ச்சத்துக்கள் மிகுந்தும், கலோரி குறைந்தும் உள்ளதால், உடல் எடை குறைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த முள்ளங்கி இலையாகும். எனவே, இந்த முள்ளங்கி இலையில் சூப் வைத்து குடித்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.
முடக்குவாதம் இன்று பெரும்பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த முள்ளங்கி இலை இதற்கும் தீர்வு தருகிறது.. ஆர்த்தரைடிஸ், முடக்குவாதம் பிரச்சினை உள்ளவர்கள், முள்ளங்கி இலையை உணவில் தாராளமாக சேர்க்க வேண்டும்.. இதனால், மூட்டுவலி, மூட்டு எலும்புகளில் ஏற்படும் தொற்றுக்களையும் இந்த இலைகள் சரிசெய்துவிடும்.. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் இந்த இலைகள் குறைத்துவிடும்.
உள்ளுறுப்புகள்: உள்ளுறுப்புகளை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த இலைகள் உதவுகின்றன.. குறிப்பாக பெண்கள் அனைவருமே இந்த இலையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டுமாம். காரணம், பெண்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்குவது ரத்த சோகைதான்.. இந்த இரும்புச்சத்து குறைப்பாட்டை முள்ளங்கி இலைகள் தீர்க்கின்றன..
மலச்சிக்கலையும் தீர்க்கின்றன.. சருமத்தின் ஆரோக்கியத்தையும் காக்கின்றன . முள்ளங்கி இலையை உணவில் அதிகம் சேர்த்து கொள்பவர்களுக்கு அலர்ஜி தொந்தரவுகள் வருவதில்லையாம். இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உடல் கழிவுகளை முழுமையாக வெளியேற்றுகிறது.
சிறுநீரகம்: சிறுநீரகத்தில் தொற்றுக்கள் பாதிக்காத வகையில், இந்த இலைகள் செயல்படுகின்றன.. அதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கீரையாக இது உள்ளது.. இந்த கீரையில் சாறு எடுத்து, வெந்தயத்தை அதில் ஊறவைத்து உலர்த்தி தூள் செய்து, தினமும் 2 வேளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். அதுமட்டுமல்ல, இந்த இலையிலிருந்து 6 ஸ்பூன் அளவுக்கு சாறு எடுத்து குடிக்கும்போது, சிறுநீரக கற்களும் கரைந்துவிடுமாம்..
கல்லீரலுக்கு பலத்தை தருவதால், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த இலையை தவறவிடக்கூடாது.. இதயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற இலை இந்த முள்ளங்கி இலையாகும்.
மூலநோய்: அதேபோல, கடுமையான மூலத்தையும், இந்த இலைகள் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.. காரணம், இதிலுள்ள ஆன்டி - பாக்டீரியல் பண்புகள், மூலத்தால் ஏற்படும் வீக்கத்தையும், தொற்றையும் குறைப்பதில் பெரும்பங்காற்றுகிறதாம்.. எனவே, முள்ளங்கி இலையில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, ஆசன வாய் பகுதியில் தடவிவரும்போது, மூலநோய் தீவிரம் குறையுமாம்.. எரிச்சலும் தணியும் என்கிறார்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications