Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட்லிக்கு ஊற வைக்கிறீங்களா? ஆரோக்கியம் கிடைக்க இதையும் சேருங்க.. இட்லியை "இவங்க" சாப்பிடக் கூடாதாமே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைவராலும் உண்ணக்கூடிய உணவாக, அனைவருக்குமான உணவாக கருதப்படுகிறது இட்லி. ஆனால், இப்படிப்பட்ட இட்லியை, ஒருசிலர் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்துகிறார்கள். அந்தவகையில் யாரெல்லாம் இட்லியை தவிர்க்கலாம்? அதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?

இட்லியை பொறுத்தவரை கொழுப்புச்சத்து இல்லாதவை.. ஆவியில் வேகக்கூடியவை.. கலோரிகள் குறைவாக இருப்பவை.. ஒரே ஒரு இட்லியில் 90 - 100 கவோரி இருக்கிறதாம்.. அத்துடன், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கப்படுவதால், புரோட்டீன்கள் நிறைய உள்ளன. நார்ச்சத்துக்களும் முழுமையாக நமக்கு கிடைக்கின்றன.

idli dosa diabetics

சர்க்கரை நோயாளி: நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடையை ஒரே சீராக வைத்து கொள்பவர்களுக்கும், நார்ச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த இட்லி அருமையான உணவாகும். இதனால் இதய ஆரோக்கியம் சீராகிறது. அந்தவகையில் இட்லி ஆரோக்கியமான உணவாகவே கருதப்படுகிறது.

எனினும், அசிடிட்டி, நெஞ்செரிச்சல், குடல் சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் இட்லியை குறைவாக சாப்பிடலாம்.. ஏனென்றால், நொதித்தல் முறையில் இட்லி புளிக்க வைக்கப்படுவதால், அது செரிக்கும்போது, வெளியிடும் வாயுக்கள், குடல் உபாதைகளை அதிகரிக்க செய்யலாம்.

அதேபோல, கார்போஹைட்ரேட், ஸ்டார்ச் இரண்டுமே இட்லியில் உள்ளதால் உடல் எடையும் கூடும் என்பதால், இவர்கள் இட்லியை தவிர்க்கலாம்.. அதேபோல, மூட்டுவலி, ஆர்த்தரைடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் அரிசி உணவை அதிகமாக எடுக்கும்போது மூட்டுவலியும் அதிகரிக்கக்கூடும்..

சர்க்கரை நோயாளி: அதேபோல, சர்க்கரை நோயாளிகள் இதை கூடுமானவரை தவிர்க்கலாம் என்கிறார்கள். காரணம், கலோரி குறைவு மிக்க உணவு என்றாலும், நான்கைந்து இட்லிகளை சாப்பிட்டால் அது ஆரோக்கியமாக அமையாது.. கார்போஹைட்ரேட், கிளைசெமிக் குறியீடு இவைகள் உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இட்லியை குறைத்து கொள்வது அல்லது தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.

அல்லது அரிசியை குறைத்துவிட்டு பாசிப்பருப்பும் சேர்த்தும் ஊறவைத்து இட்லி மாவு அரைத்தால் கார்போஹைட்ரேட் குறைந்து புரதங்கள் அதிகரிக்கும். இந்த இட்லி மாவில் கேரட், பீன்ஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் சேர்த்து வெஜிடபிள் இட்லியாக செய்யலாம்.. எவ்வளவு சத்தான இட்லியாக இருந்தாலும் 2 இட்லி, 2 தோசை என்பதுதான் காலையில் எடுத்து கொள்ள வேண்டுமாம்.

பாசி பருப்பு: தேங்காய் சட்னிக்கு பதிலாக புரதம் நிறைந்த பருப்புகளை கொண்டு, சாம்பார் சேர்த்து கொள்ளலாம். அதுவும் பாசி பருப்பில் சாம்பார் செய்து சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

பாசிப்பருப்புடன் சோம்பு சேர்த்து சாம்பார் சாப்பிடும்போது, ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம். அதேபோல, கேழ்வரகு, ஓட்ஸ், கொள்ளு உள்ளிட்ட சிறுதானியங்கள் போன்றவற்றை சேர்த்து மாவு அரைத்து இட்லி வார்க்கலாம்... கருப்பு உளுந்து பயன்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும் என்கிறார்கள்.. சிலர் இட்லி அரைக்கும்போது, அவல் ஒரு கைப்பிடி சேர்த்து அரைப்பதுண்டு. அரிசிக்கு பதிலாக, சிறுதானியங்கள் நார்ச்சத்து அதிகமாக இருப்பதுடன், வயிறு நிரம்பிய உணர்வையும் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+