Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நரம்பு வலுப்பெற உதவும் மருதாணி இலை.. மருந்தாகும் மருதாணியை கர்ப்பிணி வைக்கலாமா? ஆரோக்கிய மருத்துவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருதாணி இலைகளினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? கர்ப்பிணிகள் மருதாணி வைக்கலாமா? கர்ப்ப காலத்தில் மருதாணி வைப்பதால், குழந்தைக்கு ஏதாவது தொந்தரவு வருமா? டாக்டர்கள் சொல்வதென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

நம்முடைய உடலிலுள்ள அனைத்து நரம்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளும், உள்ளங்கையில்தான் குவிந்துள்ளன. எனவேதான், உள்ளங்கையில் மருதாணி வைக்கப்படுகிறது. இந்த இலைகளை அரைத்து கைகளில் பூசுவதால், நரம்புகள் வலுவடைவதுடன், நரம்புகளின் செயல்பாடுகளும் தூண்டப்படுகின்றன.. உடலில் ரத்த ஓட்டம் சீராக பாய்கின்றன..

henna leaves pregnancy mehndi

ரத்த ஓட்டம்: பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் பலவீனமாக இருக்கும். இதனால், கை, சரியான ரத்த ஓட்டம் இல்லாமல், பாதங்களில் எரிச்சல், குடைச்சல் ஏற்படும். டீ, காபி குடிப்பதால் பித்தம் அதிகமாகிவிடும். பித்தம் அதிகமானால் மனநிலை சிதறல், மனநோய் போன்றவை ஏற்படாமல் இருக்க, நம்முடைய முன்னோர்கள் மருதாணி வைக்கும் பழக்கத்தை கொண்டுவந்துள்ளனர்.

வெறுமனே ஒரு கைப்பிடி மருதாணி எடுத்து, கழுவி சுத்தம் செய்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, இரவு உணவுக்கு பிறகு குடித்து வந்தால் ரத்தம் தூய்மையாகும். பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தாலும் கட்டுப்படும்.. நகச்சுத்தி, சேற்றுப்புண், பாதஎரிச்சல், கால் ஆணிகளுக்கு மருதாணியே மருந்தாகின்றன. மருதாணியின் வேர் பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் குடிப்பதால, அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்..

செயற்கை மருதாணி: அதேசமயம், கர்ப்ப காலத்தில், பெண்கள் மருதாணி வைக்கலாமா? என்ற சந்தேகம் எழும்.. அப்படி மருதாணி வைப்பது குழந்தையை பாதிக்கும் என்றும் தகவல்கள் உள்ளன.. ஆனால், மருதாணி வைப்பால், வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.. அறிவியல் ரீதியாகவும் எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லையாம்.

செயற்கையாக விற்கப்படும், மருதாணியை பூசினாலும், சரும பிரச்சனைகள்தான் வருமே தவிர, ரத்த ஓட்டத்தை பாதிக்காது, தொப்புள் கொடியை கடந்து குழந்தையையும் பாதிக்காது. என்கிறார்கள்.

கர்ப்பகாலம்: எனினும், பாரா-ஃபெனிலினெடியமைன் (PPD) போன்ற ரசாயன சேர்க்கைகளுடன் மருதாணியை, கர்ப்பகாலத்தில் தவிர்த்துவிட்டு, முடிந்தவரை இயற்கையான மருதாணியை பயன்படுத்துவது நல்லது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+