Curd: இரவில் தயிர் சாப்பிடுவது நல்லதா? எதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது?
சென்னை: இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா என்பது குறித்து நிறைய பேருக்கு கேள்வி இருக்கும். பலருக்கு எப்போதுமே தயிர் சாப்பிட பிடிக்கும். ஆனால் வீட்டில் இருப்பவர்கள், ஐயோ இரவில் தயிர் சாப்பிடக் கூடாது என நம்மை எச்சரிப்பார்கள். எனவே தயிரை சாப்பிடலாமா கூடாதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் தயிர் வீட்டில்தான் தயாரிக்கப்படுகிறது. இரவு முழுவதும் பாலை உறையிட்டு, காலை உணவில் (ரொட்டி, சாதம், பருப்பு, காய்கறிகளுடன்) புதிய தயிரை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பல சத்தான நன்மைகளைத் தரும் இந்த தயிரை, இரவு நேரத்தில் சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு.

பொதுவாக, இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவது தவறு இல்லை. ஆனால், செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, இது சில சங்கடங்களையோ அல்லது அஜீரணத்தையோ ஏற்படுத்தலாம். தயிர் கொழுப்பும் புரதமும் நிறைந்த ஒரு உணவு என்பதால், இரவில் உடலின் மெட்டபாலிசம் (வளர்சிதை மாற்றம்) மெதுவாக இருக்கும்போது, இதை ஜீரணிப்பது சற்றுக் கடினமாக இருக்கும்.
ஆயுர்வேதத்தின்படி, தயிர் உடலில் 'கப' தோஷத்தை அதிகரிக்கும். இயல்பாகவே இரவு நேரங்களில் உடலின் கபத்தின் அளவு அதிகமாக இருக்கும். இது மூக்கு மற்றும் சுவாசக் குழாய்களில் அதிக சளி சேர வழிவகுக்கும். இந்த விளைவுகள் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனாலும், ஆஸ்துமா, இருமல், சளித் தொந்தரவுகள் உள்ளவர்கள் இரவு உணவில் தயிரைத் தவிர்ப்பது நல்லது.
இரவு நேரத்தில் தயிரைத் தவிர்த்து, காலை அல்லது மதிய உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த நேரங்களில் தயிரை ஜீரணிப்பது சுலபம். மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களுடன் சேர்த்து காலை உணவாகவும் சாப்பிடலாம். இதனால் அதன் முழு சத்துக்களையும் பெற முடியும்.
தயிர் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. எலும்பு ஆரோக்கியத்திற்கும், தசைகளின் வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
புரோபயாடிக் சத்தின் முழு நன்மைகளையும் பெற, வீட்டில் தயாரிக்கப்படும் புதிய தயிர் சிறந்தது. பேக் செய்யப்பட்ட அல்லது சுவையூட்டப்பட்ட தயிரில் அதிக சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆகவே, நம்பகமான உள்ளூர் பால் கடைகளில் வாங்குவது ஆரோக்கியமானதாகும்.
தயிர் பொதுவாக எல்லோருக்கும் நல்லது. ஆனால், லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்கள் அல்லது பால் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படும் நபர்கள் தயிரைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகப் பிரச்னை அல்லது அதிக கொழுப்பு உள்ளவர்கள் அளவோடு சாப்பிட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக சாப்பிடாமல் இருக்க, மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications