Curd: இரவில் தயிர் சாப்பிடுவது நல்லதா? எதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது?
சென்னை: இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா என்பது குறித்து நிறைய பேருக்கு கேள்வி இருக்கும். பலருக்கு எப்போதுமே தயிர் சாப்பிட பிடிக்கும். ஆனால் வீட்டில் இருப்பவர்கள், ஐயோ இரவில் தயிர் சாப்பிடக் கூடாது என நம்மை எச்சரிப்பார்கள். எனவே தயிரை சாப்பிடலாமா கூடாதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் தயிர் வீட்டில்தான் தயாரிக்கப்படுகிறது. இரவு முழுவதும் பாலை உறையிட்டு, காலை உணவில் (ரொட்டி, சாதம், பருப்பு, காய்கறிகளுடன்) புதிய தயிரை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பல சத்தான நன்மைகளைத் தரும் இந்த தயிரை, இரவு நேரத்தில் சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு.

பொதுவாக, இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவது தவறு இல்லை. ஆனால், செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, இது சில சங்கடங்களையோ அல்லது அஜீரணத்தையோ ஏற்படுத்தலாம். தயிர் கொழுப்பும் புரதமும் நிறைந்த ஒரு உணவு என்பதால், இரவில் உடலின் மெட்டபாலிசம் (வளர்சிதை மாற்றம்) மெதுவாக இருக்கும்போது, இதை ஜீரணிப்பது சற்றுக் கடினமாக இருக்கும்.
ஆயுர்வேதத்தின்படி, தயிர் உடலில் 'கப' தோஷத்தை அதிகரிக்கும். இயல்பாகவே இரவு நேரங்களில் உடலின் கபத்தின் அளவு அதிகமாக இருக்கும். இது மூக்கு மற்றும் சுவாசக் குழாய்களில் அதிக சளி சேர வழிவகுக்கும். இந்த விளைவுகள் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனாலும், ஆஸ்துமா, இருமல், சளித் தொந்தரவுகள் உள்ளவர்கள் இரவு உணவில் தயிரைத் தவிர்ப்பது நல்லது.
இரவு நேரத்தில் தயிரைத் தவிர்த்து, காலை அல்லது மதிய உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த நேரங்களில் தயிரை ஜீரணிப்பது சுலபம். மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களுடன் சேர்த்து காலை உணவாகவும் சாப்பிடலாம். இதனால் அதன் முழு சத்துக்களையும் பெற முடியும்.
தயிர் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. எலும்பு ஆரோக்கியத்திற்கும், தசைகளின் வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
புரோபயாடிக் சத்தின் முழு நன்மைகளையும் பெற, வீட்டில் தயாரிக்கப்படும் புதிய தயிர் சிறந்தது. பேக் செய்யப்பட்ட அல்லது சுவையூட்டப்பட்ட தயிரில் அதிக சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆகவே, நம்பகமான உள்ளூர் பால் கடைகளில் வாங்குவது ஆரோக்கியமானதாகும்.
தயிர் பொதுவாக எல்லோருக்கும் நல்லது. ஆனால், லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்கள் அல்லது பால் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படும் நபர்கள் தயிரைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகப் பிரச்னை அல்லது அதிக கொழுப்பு உள்ளவர்கள் அளவோடு சாப்பிட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக சாப்பிடாமல் இருக்க, மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications