ஹெச்டிஎப்சி வங்கியில் 500 காலி பணியிடங்கள்; ஆண்டுக்கு 12 லட்சம் வரை சம்பளம்
சென்னை: இந்தியாவில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கி நாடு முழுவதும் வங்கி சேவை மேலாளர் (rm) பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. காலியிடங்களின் எண்ணிக்கை 500 ஆக உள்ளது. வரும் பிப்ரவரி 7ம் தேதிக்குள் தகுதியுடையவர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சம்பளம் 12 லட்சம் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் அரசு வேலை கிடைப்பது என்பது எளிதானது இல்லை.. கோடிக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைகளில் சேருவதற்கு போட்டித்தேர்வுகள் எழுதுகிறார்கள். ஆனால் அரசு தேர்வுகளோ ஒவ்வொரு மாநிலத்திலும் சில ஆயிரம் இளைஞர்களுக்கே ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கிறது. அரசு வேலை ஒன்றுதான் 58 வயது முதல் 60 வயதுவரை வேலை உறுதியாக இருக்கும் என்கிற நிலை உள்ளது.

தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒருவர் 40 வயதிற்கு மேல் வேலைவாய்ப்புகள் குறைந்துவிடும். 50 வயதை தாண்டி வேலை இருப்பதே சவாலாக உள்ளது. அதேநேரம் வங்கி வேலைகளை பொறுத்தவரை அரசு பொதுத்துறை வங்கிகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. நல்ல சம்பளமும் கிடைக்கிறது. ஆனால் இதற்கு போட்டி கடுமையாக இருக்கிறது.. அதேநேரம் இந்தியாவின் பெரிய தனியார் வங்கிகளில் வேலையில் சேருவோருக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது. வேலைவாய்ப்பும் ஓரளவு நிரந்தரமாகவே உள்ளது. நாட்டின் முன்னணி தனியார் வங்கியான, ஹெச்டிஎப்சி வங்கியில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ள ஹெச்டிஎப்சி வங்கி நாடு முழுவதும் வங்கி சேவை மேலாளர் (rm) பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.
காலியிடங்கள் எண்ணிக்கை: 500
பதவி: வங்கி சேவை மேலாளர் (RM)
பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி: பிப்ரவிரி 7. 2025
நியமனப் பதவிகள்: அசிஸ்டன்ட் மேனேஜர்/டெபுட்டி மேனேஜர்/மேனேஜர்/சீனியர் மேனேஜர்
சம்பளம்: ரூ.3 லட்சம், ரூ-12 லட்சம்*

தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்ற பட்டதாரிகள்
எந்த ஒரு நிறுவனத்திலும் 1-10 ஆண்டுகள் விற்பனை அனுபவம்
வயது
விண்ணப்பதாரருக்கு 07.02.2025 தேதிப்படி வயது 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி: https://www.hdfcbank.com/personal/about-us/careers












Click it and Unblock the Notifications