நாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு(என்.டி.ஏ) பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ராணுவம், கடல் மற்றும் விமானப் படைகளில், வீரர்களுக்கான நிரந்தர பணியில் சேர, என்.டி.ஏ., எனப்படும் தேசிய ராணுவ அகாடமி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, ஆண்டுக்கு இருமுறை நடைபெறுகிறது.

நீண்ட கால கோரிக்கை
மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் இந்த தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு எழுத ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. பெண்கள் எழுத முடியாது. பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் போட்டி கொடுக்கும் இந்த காலத்தில் பாதுகாப்புப் படையில் பெண்களுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் பாதுகாப்புப் படையில் பெண்களுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும். தேசிய ராணுவ அகாடமி தேர்வில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

கண்டிப்பு
இதற்கு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு. 'என்டிஏ நுழைவுத் தேர்வில் பெண்கள் பங்கேற்க அடுத்த ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிடப்படும்' என்று கூறியது. ஆனால் இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த ஆண்டே தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.

வெளியானது அறிவிப்பு
இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இந்தியாவில் முதன்முறையாக தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வில்(II) பெண்கள் பங்கேற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள்
தகுதியும், திறமையும் வாய்ந்த பெண்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 08.10.2021 ஆகும். மேலும் விவரங்களை www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த அறிவிப்பினால் இளம் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications