ரயில்வேயில் வேலை.. 1,113 பணியிடங்கள்.. ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. செம சான்ஸ்!
சென்னை: தென்கிழக்கு ரயில்வேயில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிர்பபுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,113 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்ன என்பனவற்றை இங்கே பார்க்கலாம்.
தென்கிழக்கு ரயில்வேயில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ கல்வி தகுதி கொண்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பல்வேறு தூறைகளில் மொத்தம் 1,113 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
* வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்) -161 பணியிடங்கள்
* டர்னர் - 54
* ஃபிட்டர் - 207
* எலக்ட்ரீஷியன் - 212
* ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்) - 15
* ஸ்டெனோகிராபர் (இந்தி) - 08
* கணினி இயக்குபவர் / நிரல் உதவியாளர் - 10
* சுகாதாரம் மற்றும் சுகாதார ஆய்வாளர் - 25
* மெஷினிஸ்ட் - 15
* மெக்கானிக்கல் டீசல் - 81
* மெக்கானிக்கல் ரெஃப்ரிக் & ஏர் கண்டிஷனர் - 21
* மெக்கானிக் ஆட்டோ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 35
ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம் வரை மாத சம்பளம்! இசிஐஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க
என 844 பணியிடங்கள் ராய்பூர் DRM அலுவலகத்தில் நிரப்பப்படுகின்றன. ராய்ப்பூரில் உள்ள வேகன் பழுதுபார்க்கும் பிரிவில் 269 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 1,113 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி என்ன?: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். பணியிடங்களுக்கு ஏற்ப துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 15 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயது முடிந்தவர்கள் விண்ணபிக்க முடியாது. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொது பிரிவில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு. எஸ்.சி/ எஸ்டி பிரிவில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: மெரிட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பிக்க அவகாசம் 02.04.2024 அன்று தொடங்குகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 01. 05. 2024 கடைசி நாள் ஆகும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ரயில்வே வாரிய விதிகளின் படி ஊதியம் அளிக்கப்படும். விண்ணப்பாதரர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பை படிக்க https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications