அருமையான வாய்ப்பு.. இந்திய வனத்துறையில் பணியாற்ற விருப்பமா.. விண்ணப்பிக்கலாம் வாங்க
டெல்லி: இயற்கையோடு பிண்ணிப்பிணைந்த வாழ்க்கை என்றால் அது வனத்துறை வேலை தான். அதில் மிக உயரிய பதவியான ஐஎப்எஸ் பணி என்பது ஐஏஎஸ் ஐபிஎஸ் பதவிகளுக்கு இணையானது.
Recommended Video
90 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் வெளியிட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு வரும் மார்ச் 3ம் தேதிக்குள் யுபிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்களை இப்போது பார்ப்போம்

யார் விண்ணப்பிக்கலாம் :
வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், வேதியியல் பொறியியல், வனவியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் உள்ளிட்டவற்றில் இளங்கலை பட்டம் பெற்ற யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு
எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம். 01.08.2020 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 1988 ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதிக்கு பிறகு பிறந்தவாகவும், 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இரு தேர்வுகள்
இதுவும் ஐஏஎஸ் ஐபிஎஸ் பதவிகளை போல்தான். முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி
http://www.upsconline.nic.in இணையதளத்தில் வரும் மார்ச் 3ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பித்து விடுங்கள். விண்ணப்பிக்க எவ்வளவு கட்டணம் என்றால், ரூ.100. செலுத்த வேண்டும். ஆன்லைனிலேயே செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்துள்ளது.

தேர்வுகள் தேதிகள்
முதலில் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நவம்பரில் மெயின் தேர்வு நடைபெறும் . முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 31.05.2020. தேர்வுக்கு செல்லும் போது போட்டோ ஐடி கொண்டு செல்ல வேண்டும். எதை கொண்டு செல்ல போகிறீர்களோ அதை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அப்லோட் செய்துவிட வேண்டும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் அளிக்கப்படும்.
சென்னை மட்டுமே
தமிழகத்தில் எழுத்துத் தேர்வை சென்னை, கோவை, மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட நான்கு இடங்களில் எழுதலாம். ஆனால் நவம்பரில் நடைபெறும் மெயின் தேர்வை தமிழகத்தில் சென்னையில் மட்டுமே எழுத முடியும். வேறு தேர்வு மையங்கள் கிடையாது. தென்னிந்தியாவில் சென்னை, ஹைதராபாத்தில் மட்டுமே மெயின் தேர்வை எழுத முடியும். முழு விவரங்களுக்கு கீழே உள்ள பிடிஎப்பில் பார்க்கலாம்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications