ஐடிஐ, டிப்ளமோ முடித்திருந்தால் போதும்.. பிஎஸ்எப்-இல் சூப்பர் ஜாப்.. 1.17 லட்சம் வரை சம்பளம்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் காலியாக உள்ள 37 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்ன என்பன குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் என மொத்தம் 37 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்: சப் இன்ஸ்பெக்டர் (வாகன மெக்கானிக்) - 03 பணியிடம்
கான்ஸ்டபிள்- 34 பணியிடம் என மொத்தம் 37 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கான்ஸ்டபிள் பணியிடத்தை பொறுத்தவரை பிட்டர், கார்பெண்டர், ஆட்டோ எலக்ட்ரிக், வாகன மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறர்கள். இது குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: சப் இன்ஸ்பெக்டர் Vehicle Mechanic- பணிக்கு மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ அல்லது ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பு அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க் படித்து இருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பணிகளுக்கு துறை சார்ந்த பிரிவில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து இருப்பது அவசியம். அல்லது சம்பந்தப்பட்ட துறையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு & சம்பளம்: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கான்ஸ்டபிள் பணிக்கு 18 முதல் 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு மாதம் ரூ.35,400 - 1,12,400- வரை சம்பளமாக கிடைக்கும். கான்ஸ்டபிள் பணிக்கு ரூ.21700 – 69100 வரை கிடைக்கும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரகள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.247.20 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி / எஸ்டி உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது.
கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.147.20 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 17.06.2024 கடைசி நாள் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் அறிவிப்பினை படிக்க https://rectt.bsf.gov.in/#bsf-current-openings இந்த இணையதளத்தை சென்று பார்வையிடவும்.
-
IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு அடித்த ஜாக்பாட்.. சென்னையிலேயே ஐடி வேலை ரெடி -
HCL IT JOBS: நாளை சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் எச்சிஎல்.. சூப்பர் சான்ஸ் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை












Click it and Unblock the Notifications