ஐடிஐ, டிப்ளமோ முடித்திருந்தால் போதும்.. பிஎஸ்எப்-இல் சூப்பர் ஜாப்.. 1.17 லட்சம் வரை சம்பளம்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் காலியாக உள்ள 37 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்ன என்பன குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் என மொத்தம் 37 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்: சப் இன்ஸ்பெக்டர் (வாகன மெக்கானிக்) - 03 பணியிடம்
கான்ஸ்டபிள்- 34 பணியிடம் என மொத்தம் 37 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கான்ஸ்டபிள் பணியிடத்தை பொறுத்தவரை பிட்டர், கார்பெண்டர், ஆட்டோ எலக்ட்ரிக், வாகன மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறர்கள். இது குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: சப் இன்ஸ்பெக்டர் Vehicle Mechanic- பணிக்கு மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ அல்லது ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பு அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க் படித்து இருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பணிகளுக்கு துறை சார்ந்த பிரிவில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து இருப்பது அவசியம். அல்லது சம்பந்தப்பட்ட துறையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு & சம்பளம்: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கான்ஸ்டபிள் பணிக்கு 18 முதல் 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு மாதம் ரூ.35,400 - 1,12,400- வரை சம்பளமாக கிடைக்கும். கான்ஸ்டபிள் பணிக்கு ரூ.21700 – 69100 வரை கிடைக்கும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரகள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.247.20 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி / எஸ்டி உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது.
கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.147.20 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 17.06.2024 கடைசி நாள் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் அறிவிப்பினை படிக்க https://rectt.bsf.gov.in/#bsf-current-openings இந்த இணையதளத்தை சென்று பார்வையிடவும்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications