Canara Bank: கனரா வங்கியில் வேலை.. 3,500 காலிப்பணியிடங்கள்! தமிழ் தெரிந்தால் முன்னுரிமை.. தூள் கிளப்புங்க
சென்னை: பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் (Canara Bank Job Recruitment) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,500 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 394 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருப்பது கனரா வங்கி. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படுகின்றன.

ஐபிபிஎஸ் வாயிலாகவும், நேரடியாகவும் இந்த பணியிடங்களை கனரா வங்கி நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 3,500 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 394 காலியிடங்களும் கேரளாவில் 243 காலியிடங்களும் கர்நாடகாவில் 591 பணியிடங்களும் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம். தமிழகத்தை சேர்ந்தவர்கள் பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம். விண்ணப்பதாரர்கள் 01.01.2022 ஆம் ஆண்டுக்கு முன்பாகவோ 01.09.2025 க்கு பிறகோ டிகிரி முடித்தவர்களாக இருக்க கூடாது.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவர்களும் அதிகபட்சம் 28 வயது பூர்த்தி அடையாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 01.09.1997 க்கு முன்போ 01.09.2005 க்கு பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது.
அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 15 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்டி/எஸ்சி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் https://canarabank.bank.in/
என்ற இணையதளத்தில் உள்ள தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம். அதன்பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 12.10.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://canarabank.bank.in/UploadedFiles/Pdf/NOTIFICATION-%20APP-22.pdf












Click it and Unblock the Notifications