மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கொட்டி கிடக்கும் வேலைகள்.. மாதம் 81,100 வரை சம்பளம்
டெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் எழுத்தர், அஞ்சல் உதவியாளர், தரவு நுழைவு ஆப்ரேட்டர் உள்பட காலியாக உள்ள 4,726 பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு படித்த தகுதியானர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2020 ஆகும். தட்டச்சு படித்து பணி அனுபம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்தர், அஞ்சல் உதவியாளர், தரவு நுழைவு ஆப்ரேட்டர் உள்பட காலியாக உள்ள 4,726 பணியிடங்கள்
வேலை தரும் நிறுவனம்: மத்திய அரசு
வேலைகள் லோவர் டிவிசன் கிளர்க் (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
ஊதியம்: மாதம் ரூ. 19,900-63,200
வேலைகள்: Postal Assistant/ Sorting Assistant
கல்வி தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வேலைகள் : டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (DEO)
பணி: டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் Grade 'A'
ஊதியம்: மாதம் ரூ.25,500-81,100
கல்வி தகுதி: அறிவியல் மற்றும் கணித பாடப்பிரிவுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2021 தேதியின்படி 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு முறை: இரண்டு கட்ட தேர்வு மற்றும் திறன் தேர்வு, தட்டச்சு தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2020