For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ் தெரிந்தாலே ரூ.50000 வரை சம்பளம்.. தமிழக அரசு வேலை.. விண்ணப்பிக்கலாம் வாங்க

Google Oneindia Tamil News

தென்காசி : திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 33 (ஆண்-25, பெண்-8) சமையலர் பணியிடங்கள் 15700-50000 என்ற ஊதிய பிணைப்பில் ரூ.15,700/- ஊதியத்திலும் மற்றும் 4 (ஆண்-2, பெண்-2) பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்கள் ரூ.3000/- தொகுப்பூதியத்திலும் பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 Chef and Cleaner post in Adithravidar Health Department, Tirunelveli, Tenkasi District

• விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
• சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்.
• 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
• திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

தகுதியான நபர்கள் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல்மூலமாகவோ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 12.01.2021 -க்குள் விண்ணப்பித்திட வேண்டும் என தனது அறிக்கையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Applications are invited for the posts of Chef and Cleaner in Adithravidar Health Department, Tirunelveli, Tenkasi District. Those who can read and write in Tamil can apply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X