Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு முழுக்க உள்ள.. அரசு, தனியார் ஊழியர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றம்.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), தனது சேவைகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் 'இபிஎஃப்ஓ 3.0' (EPFO 3.0) என்ற புதிய சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடங்ககவுள்ளது. இபிஎஃப்ஓ 3.0-ன் ஒரு முக்கியச் சிறப்பம்சமாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

சமீபத்தில் பணம் எடுக்கும் விதிமுறைகளைத் தளர்த்தியது மற்றும் யுபிஐ (UPI) மூலம் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'இபிஎஃப்ஓ 3.0' (EPFO 3.0) கொஞ்சம் கொஞ்சமாக அமலுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான ஐடி (IT) நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க டெண்டர் விடும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

Digital Transformation of Retirement Savings EPFO 3 0 to Integrate Core Banking and AI for 8 Crore Workers

இபிஎஃப்ஓ 3.0-ன் முக்கிய அம்சங்கள்:

புதிய மென்பொருள் மற்றும் போர்டல்: அடுத்த பத்து ஆண்டுகாலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, புதிய இணையதளம் (Portal) மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் (Backend Software) உருவாக்கப்பட உள்ளது.

கோர் பேங்கிங் தீர்வு (Core Banking Solution): வங்கிகளில் இருப்பதைப் போன்ற ஒரு மையப்படுத்தப்பட்ட (Centralized) வங்கிச் செயல்பாட்டு முறைக்கு இபிஎஃப்ஓ மாறுகிறது. இதன் மூலம், சந்தாதாரர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தங்கள் கணக்கு தொடர்பான சிக்கல்களை எளிதாகத் தீர்த்துக் கொள்ள முடியும்.

அனைவருக்குமான சேவை: புதிய தொழிலாளர் சட்டங்களின் அமலாக்கத்தைத் தொடர்ந்து, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத (Organised & Unorganised) தொழிலாளர்கள் என அனைவருக்குமான தேவைகளை இந்த 3.0 பதிப்பு பூர்த்தி செய்யும்.

கிக் ஒர்க்கர்ஸ் (Gig Workers): ஆன்லைன் தளங்கள் மூலம் வேலை செய்யும் 'கிக் ஒர்க்கர்ஸ்' மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியையும் இனி இபிஎஃப்ஓ நிர்வகிக்க வாய்ப்புள்ளது.

AI மூலம் உங்கள் மொழியிலேயே தீர்வு:

இபிஎஃப்ஓ 3.0-ன் ஒரு முக்கியச் சிறப்பம்சமாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் உடனே பணம் எடுக்க முடியும். வேகமாக பணம் எடுக்க முடியும். இப்போது இருப்பது போல் 2 வாரங்கள் காத்திருக்க வேண்டியது இல்லை.

பாஷினி (Bhashini): மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கிய 'பாஷினி' என்ற மொழிபெயர்ப்புத் தளம் இதில் இணைக்கப்படும்.

இதன் மூலம், சந்தாதாரர்கள் தங்கள் சொந்த மொழியிலேயே (தாய்மொழி) தகவல்களைப் பெறவும், புகார்களுக்குத் தீர்வு காணவும் முடியும்.

தற்போதைய நிலை மற்றும் அடுத்த கட்டம்:

நிதியளவு: தற்போது இபிஎஃப்ஓ-வில் சுமார் 8 கோடி செயலில் உள்ள உறுப்பினர்கள் உள்ளனர். இதன் மொத்த நிதி மதிப்பு 28 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.

டெண்டர் பணிகள்: இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான ஐடி (IT) நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க டெண்டர் விடும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய நன்மைகள்:

நிர்வாகச் செயல்பாடுகள் மையப்படுத்தப்படுவதால் வேகம் மற்றும் துல்லியம் அதிகரிக்கும்.

பயனாளர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் இணையதளம் மாற்றப்படும்.

தாய்மொழியிலேயே சேவைகளைப் பெற முடிவது தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+