எஸ்பிஐ வங்கியில் வேலை.. தேர்வுகள் இல்லை... காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. உடனே ரெடியா?
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் Realtioship Manager, Customer Relationship Executive உள்பட பல்வேறு சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 18.10.2021க்குள் வரவேற்கப்படுகின்றன.
இதேபோல் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நாடு முழுவதும் காலியாக உள்ள 2056 Probationary Officer பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வெளியிட்டுள்ளது . அக்டோபர் 5ம் தேதியான இன்று தொடங்கி 25.10.2021 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு பிரிமிமினரி தேர்வு, மெயின் தேர்வு , நேர்முகத்தேர்வு ஆகிய மூன்று விதமான தேர்வுகளுக்கு பின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதுபற்றி கூடுதல் தகவல்கள்களுக்கு https://tamil.oneindia.com/jobs/sbi-2056-probationary-officers-jobs-on-2021-read-the-bank-jobs-details-in-tamil-434845.htmlஎன்ற லிங்கில் பாருங்கள்.

பணியின் பெயர்
சரி, சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் விவரங்களை பார்ப்போம்.
Realtioship Manager / காலியிடங்கள்: 334
Customer Relationship Executive -காலியிடங்கள்: 217
Investment Officer / காலியிடங்கள்: 12
Central Research Team (Product Level) / காலியிடங்கள்: 02
Central Research Team(Support) / காலியிடங்கள்: 02

தேர்வு முறை
கல்வி தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று வங்கி, நிதி நிறுவனங்களில் சம்மந்தப்பட்ட பணியில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்

ஆன்லை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750ஐ ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. www.bank.sbi/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.10.2021 என்று அறிவிக்கப்பட்டள்ளது, மேலும் விவரங்கள் அறிய செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்.

திருச்சி வேலை
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் செயல்படும் மாவட்டத் தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம், விபத்து மற்றும் அவசர சிகிச்சைத் துறை, மது மீட்பு மையம் மற்றும் நுண்ணியிரியியல் துறை உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது

என்ன பணிகள்
டிரோமா ரெஜிஸ்டரி அசிஸ்டென்ட் -1 (ரூ.10 ஆயிரம்), அவசர சிகிசைப் பிரிவுச் செயலா் -1 (ரூ.20 ஆயிரம்), அறுவைச் சிகிச்சையரங்க தொழில்நுட்ப உதவியாளா் 2 (ரூ.15 ஆயிரம்), மாவட்டத் தொடக்க நிலை இடையீட்டு சேவை மைய உளவியலாளா்-1 (ரூ.13 ஆயிரம்), மது மீட்பு சிகிச்சை மைய உளவியலாளா்-2 (ரூ.18 ஆயிரம்) , டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டா்-3 (ரூ.10 ஆயிரம்), சமூகப் பணியாளா் -2 ( ரூ.18 ஆயிரம்), ஆய்வக ஆராய்ச்சி உதவியாளா்-2 (ரூ.40 ஆயிரம்), ஆய்வக உதவியாளா்-1 ( ரூ.6,500), மருத்துவமனைப் பணியாளா்-4 (மாத தொகுப்பூதியம் ரூ.5 ஆயிரம்), தூய்மைப் பணியாளா்-4 ( ரூ.5 ஆயிரம்), காவலா்-2 ( ரூ.6,300) ஆகிய தற்காலிக பணிகளுக்கு உரிய கல்வி தகுதி உடைய நபா்கள் தோ்வு செய்யப்படுவா்.

என்ன செய்ய வேண்டும்
இதற்காக திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் அக்டோபா் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். பணியிடங்களுக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியின் தகவல் பலகை மற்றும் கல்லூரி இணையதள முகவரியில் பாா்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications