சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை.. மாதம் 50 ஆயிரம் சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 28 சட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பார் கவுன்சிலில் அட்வகேட் ஆகவோ அல்லது இந்திய நீதிமன்றங்களில் அட்டார்னியாகவோ பதிவு செய்து இருப்பது அவசியம் ஆகும். மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

நீதிமன்றத்தில் ஏற்படும் பல்வேறு காலிப்பணியிடங்கள் சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம் வாயிலாக நிரப்பப்படுகின்றன. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிட்டு, தேர்வுகள் நடத்தி இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

High Court Job Jobs Government Jobs

அதேபோல, தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையிலும் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது 28 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதிகள் வயது வரம்பு உள்ளிட்டவற்றை காணலாம்.

பணியிடங்கள் & கல்வி தகுதி:

சட்ட உதவியாளர் (Research) - 28 பணியிடங்கள்; இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதியைப் பொறுத்தவரை தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து டிகிரி முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் அட்வகேட் ஆகவோ அல்லது இந்திய நீதிமன்றங்களில் அட்டார்னியாகவோ பதிவு செய்து இருப்பது அவசியம்.

படிப்பு காலத்தில் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வர்கள் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் உறுதி செய்து கொள்ள முடியும்.

வயது வரம்பு:

15.12.2025 தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.50,000 சம்பளம் கிடைக்கும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு சம்பளம் மட்டுமே உண்டு.

இதர சலுகைகள் எதுவும் கிடையாது. அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக சட்டப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆராய்ச்சி சட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வர்கள் ஆஃப்லை வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar General,
High Court, Madras,
Pin - 600 104,
என்ற முகவரிக்கு வரும் 15 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப உறையில், "Application for the post of Research Law Assistant to the Hon'ble Judges" என்பதை தெளிவாக குறிபிட்டு அனுப்ப வேண்டும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification_230_2025.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+