சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் பலருக்கும் கிடைத்த மத்திய அரசு வேலை.. சூப்பர் சம்பவம்
சென்னை: தேச கட்டுமானத்தில் இளைஞர்களின் பங்கேற்பை உறுதிசெய்யும் விதமாக வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் வேலைவாய்ப்பு திருவிழாக்கள் நடைபெற்றன. மத்திய அரசின் இந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 339 இளைஞர்கள் பணி நியமன ஆணைகள் பெற்றனர்.
மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தேச கட்டுமானத்தில் இளைஞர்களின் பங்கேற்பை உறுதிசெய்யும் விதமாக வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த வரிசையில் 17-வது வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற்றது. நாடு முழுவதும் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் வேலைவாய்ப்பு திருவிழாக்கள் நடைபெற்றன.

திருச்சியில் நடைபெற்ற விழாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கலந்து கொண்டு 112 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜி.அகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் பங்கேற்று 51 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த விழாவில் அவர் பேசுகையில், 'வேலைவாய்ப்பு திருவிழா என்பது இளைஞர்கள் நாட்டிற்கு சேவை செய்யவும், வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் கனவுகளை நனவாக்குவதற்கும் வாய்ப்புகளை வழங்குகிறது.
3 ஆயிரத்திற்கும் அதிகமான சுயபயிற்சிக்கான வாய்ப்புகளை கொண்டுள்ள 'கர்மயோகி பிராரம்ப்' என்ற இணையவழி சேவையை பணிநியமனம் பெற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார். இதில், கோவை தெற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் 116 இளைஞர்களுக்கு சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். மதுரையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் 60 இளைஞர்களுக்கு தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
வேலைவாய்ப்பு திருவிழாக்களில் மத்திய அரசின் அஞ்சல்துறை, நிதி சேவைகள் துறை, ரயில்வே துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் போன்றவற்றில் பணிபுரிவதற்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications