ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், உபகோவில்களில் வேலை! எழுத படிக்கத் தெரிந்தால் போதும்! சூப்பர் வாய்ப்பு!
திருச்சி: தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலும், அதனுடன் இணைந்த உபகோயில்களிலும் பல்வேறு பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் வரும் நவம்பர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த வேலைகள் அனைத்தும் இந்து சமய அறநிலையச் சட்ட விதிகளுக்குட்பட்டு நிரப்பப்படவுள்ளன. மொத்தத்தில் 30க்கும் மேற்பட்ட பணியிடங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதில் இளநிலை உதவியாளர், கூர்க்கா, திருவலகு, கால்நடை பராமரிப்பாளர், பெரிய சன்னதி உடல், வீரவண்டி, சோமக்கலம், தாயார் சன்னதி வீரவண்டி, உதவி யானைப்பாகன், சலவையாளர், கூட்டுபவர் போன்ற பணிகள் அடங்கும்.
இளநிலை உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத சம்பளம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூர்க்கா, திருவலகு, கால்நடை பராமரிப்பாளர் போன்ற பணிகளுக்கு தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கான மாத சம்பளம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரங்கநாதசுவாமி கோயில் வேலை
பெரிய சன்னதி மற்றும் தாயார் சன்னதி வாத்தியப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளிகளில் இதற்கான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உதவி யானைப் பாகன் பணிக்கு யானையை கட்டுப்படுத்தி, வழிநடத்தும் அனுபவமும், அதற்கான கட்டளைகளை வழங்கும் திறனும் இருக்க வேண்டும். இதற்கான சம்பளம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை வழங்கப்படும். மேலும் சலவையாளர் மற்றும் கூட்டுபவர் பணிகளுக்கான தகுதி, தமிழில் படிக்க எழுத தெரிந்திருப்பது மட்டுமே போதுமானது.
திருச்சி கோயில் பணியிடம்
கூட்டுபவர் பணிக்கு மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் வசிக்கும் காவல் நிலையம் வழங்கும் "குற்ற வழக்குகள் இல்லை" என்ற சான்றிதழும் சேர்க்கப்பட வேண்டும். அனைத்து சான்றிதழ்களும் உண்மைத்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்பு
விண்ணப்பதாரர்கள் திருக்கோயிலின் இணையதளமான https://srirangamranganathar.hrce.tn.gov.in இல் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்:
இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி - 620006.
விண்ணப்ப கடைசி தேதி
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் 25.11.2025 ஆகும். வேலை வாய்ப்புகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப விவரங்களை அலுவலகத்தில் நேரடியாகவும் அல்லது இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவம் மற்றும் இதர நிபந்தனைகளை அலுவலக வேலை நேரங்களில் தெரிந்து கொள்ளலாம். அல்லது https://srirangamranganathar.hrce.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications