திருச்சியில் அரசு வேலை.. 228 சமையலா், துப்புரவாளா் பணியிடங்கள்.. ரூ 50,000 வரை சம்பளம்!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அரசு விடுதிகளில் காலியாகவுள்ள 228 சமையலா், துப்புரவாளா் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு வெளியிட்டுள்ள அறிவிப்பில். "திருச்சி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடா் நல விடுதிகள், பழங்குடியினா் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள 135 சமையலா் பணியிடத்துக்கு ரூ.15700 - 50000 என்ற ஊதிய பிணைப்பில் நியமிக்கப்பட உள்ளார்கள்.

மேலும் முழு நேரத் துப்புரவாளா் பணியிடங்களில் 13 போ் ரூ. 7,700-24,200 என்ற சிறப்பு காலமுறை ஊதிய பிணைப்பில் நியமிக்கப்பட உள்ளார்கள். அத்துடன் பகுதிநேர துப்புரவாளா் பணியிடத்தில் 80 பேரும் நியமிக்கப்பட உள்ளனர். இவா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரா் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலா் பணிக்கு அனுபவமுள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 18 முதல் 35 வயது வரை உள்ளவா்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் திருச்சி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருத்தல்வேண்டும்.
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமோ மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்துக்கு அக்டோபர் 19-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications