ஊழல் அரசியல்வாதிகள்!
Subscribe to Oneindia Tamil
அந்த நாட்டு நாடாளுமன்றம் படு சூடாக இருந்தது. ஒரு எம்.பி படு ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். இந்த அவையில் உள்ள பாதிப் பேர் ஊழல்வாதிகள், கோழைகள் என்றார் கோபாவேசமாக.
இதைக் கேட்டு மற்ற உறுப்பினர்கள் கொந்தளித்தனர். உடனடியாக அந்த எம்.பி. தான் பேசியதை வாபஸ் பெற வேண்டும், இல்லாவிட்டால் அவரை கூட்டத் தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அவர்கள் ஒரே குரலில் வலியுறுத்தினர்.
இதைக் கேட்டு, கோபமாக பேசிக் கொண்டிருந்த எம்.பி. சற்று அமைதியானார். பின்னர் அவர் கூறினார், சரி, நான் பேசியதை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். இந்த அவையில் உள்ளவர்களில் பாதிப் பேர், கோழைகள் அல்ல, ஊழல்வாதிகளும் அல்ல, ஓ.கே.வா என்று கூறி விட்டு அமர்ந்தார்...












Click it and Unblock the Notifications