அவமதிச்சுட்டீங்களே அத்தை...!
Subscribe to Oneindia Tamil
ஆஞ்சு ஓஞ்சு வீட்டுக்கு வந்தான் குமார். கதவைத் திறந்தாள் மனைவி. தனது இளம் மனைவி கண்களில் கண்ணீர் கொப்பளித்துத் ததும்பியடி நின்று கொண்டிருந்ததைப் பார்த்து கவலையானான் குமார்.
குமார் - என்னடா செல்லம் ஆச்சு, ஏன் இந்த அழுவாச்சி...!
மனைவி- உங்கம்மா என்னை அவமதிச்சுட்டாங்க
குமார் - எங்கம்மாவா, அவங்கதான் நம்மை விட்டு பல நூறு கிலோமீட்டர் தூரத்திலே இருக்காங்களே..!
மனைவி - எனக்குத் தெரியாதா, உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காங்க, அதைப் பிரிச்சுப் பார்த்தேன். அதில்தான் இந்த அவமானம்...
குமார் - கடிதம் மூலம் எப்படி அவமானப்படுத்த முடியும்!
மனைவி- கடிதத்தோடு கடைசில அவங்க எழுதியிருக்காங்க.. அன்பு மருமகளே, கடிதத்தை மறக்காமல் என் மகன்கிட்ட கொடுத்திருன்னு....!
குமார் - !???!












Click it and Unblock the Notifications