கவுண்டமணியிடம் செந்தில் பேசுவது போல் நினைச்சுக்குங்க
செந்தில்: அண்ணே.. நான் ஒன்னை கண்டுபிடிச்சிருக்கேன்னே...
கவுண்டர்: நீ... நீ ஒன்னை கண்டுபிடிச்சிருக்க.. நான் நம்பனுமா
செந்தில்: உங்களுக்கு தெரியாதா? எத்தனைய நான் கண்டுபிடிச்சிருக்கேன்..
கவுண்டர்: ஆமா..ஆமா நீங்க கண்டுபிடிச்சு நோபல் பரிசு வாங்குன விஞ்ஞானிதான்..நான் நம்பறேன்.. இப்ப என்னத்த கண்டுபிடிச்ச
செந்தில்: அதாவதுண்ணே.. தண்ணியில் இருந்து ஏன் கரண்ட் எடுக்கிறாங்க...
கவுண்டர்: கரண்ட் தயாரிக்கத்தான்... இதைத்தான் கண்டுபிடிச்சியாக்கும்?
செந்தில்: உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிடுங்கண்ணே...
கவுண்டர்: சரிடா.. எனக்கு தெரியாது... சார் நீங்க உங்க கண்டுபிடிப்பை சொல்லுங்க...
செந்தில்: அதாவது.. தண்ணிக்குள்ள நாம எதுக்கு போவோம்..
கவுண்டர்: குளிக்கத்தான் போவாங்க...
செந்தில்: இப்பதான் பக்கத்துல வந்திருக்கீங்க....
கவுண்டர்: விசயத்தை சொல்லுடா முதல்ல..
செந்தில்: தண்ணியில ஆடு மாடு மனுசன் எல்லாம் குளிக்கப் போகும் போது அதுக்குள்ள இருக்கிற கரெண்ட் ஷாக் அடிக்கக் கூடாதுன்னுதான்.. தண்ணியில் இருந்து கரெண்ட்டை எடுக்கிறாங்கண்ணே...எப்படிண்ணே என் கண்டுபிடிப்பு!
கவுண்டர் என்ன செய்திருப்பார்னு யோசித்துக் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications