கல்யாணத்துல ஆடி பாடி காதலியை தேடலாம்னு வந்தா.. இப்டி பாயாசம் ஊத்த விட்டுட்டீங்களேடா!
சென்னை : கல்யாண வீடுகளில் ஆடிப்பாடி சந்தோசமாக இருக்கலாம் என நினைத்து வரும் நண்பர்களை, பந்தியில் பரிமாற வைப்பவர்களைத் திட்டி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வைகாசி மாத முகூர்த்தங்களால் திருமண மண்டபங்கள் விழாக்கோலம் பூண்டிருக்க, அடுத்த வருட முகூர்த்தத்திலாவது தங்களுக்கு திருமணம் நடக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் தங்களது புலம்பல்களை எல்லாம் நகைச்சுவையான மீம்ஸ்களாக்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக எந்த விசேஷ வீடாக இருந்தாலும், பெண்கள் பட்டுப்புடவைகளைக் கட்டிக் கொண்டு, அழகாக மேக்கப் போட்டுக் கொண்டு சுற்றி வர, இந்த பாவப்பட்ட ஆண்கள் மட்டும் கையில் சாம்பார் வாளியையும், பாயாசத்தையும் தூக்கிக் கொண்டு சுத்த வேண்டி இருக்கிறதே என்ற ஆதங்கத்தையும் மறக்காமல் அதில் பதிவு செய்துள்ளனர்.

"கல்யாணத்துல ஆடி பாடி காதலியை தேடலாம்னு வந்தா.. இப்டி பந்தில பாயாசம் ஊத்த விட்டுட்டீங்களேடா!" என்று பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்க, மற்றொருபுறம், "கல்யாணங்கறது தேவையில்லாத ஆணிதான்.. ஆனா அதை புரிஞ்சுக்கும்போது நம்ம கைல 5 வயசுல குழந்தை இருக்கும்!" என்று ஏற்கனவே திருமணமானவர்களும் தங்கள் பங்கிற்கு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications